டெக்சாஸ்: உலகிலேயே உயரமான நாய் என்று கின்னஸ் சாதனை படைத்த ஜீயஸ் நாய் எலும்புப் புற்றுநோய்க்குப் பலியாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் பெட்போர்ட் நகரைச் சேர்ந்தவர் பிரிட்டானி டேவிஸ். இவரது வீட்டில்தான் ஜீயஸ் நாய் வாழ்ந்து வந்தது. தி கிரேட் டேன் வகை நாயாகும் இது. மிகவும் உயரமாக பார்க்கவே கம்பீரமாக இருக்கும். இதன் உயரம் 1.046 மீட்டராகும். அதாவது 3 அடி 5 அங்குலமாகும். அந்த அளவுக்கு உயரமான நாய் இது.
இந்த நாயின் உயரம் காரணமாக உலகிலேயே உயரமான நாய் என்று கின்னஸ் சாதனையும் படைத்திருந்தது. இந்த நாய்க்கு எலும்புப் புற்றுநோய் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் வலது கால் கூட சமீபத்தில் நோய் பாதிப்பு காரணமாக அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
நீண்ட காலமாக போராடி வந்த ஜீயஸ் நாய் செப்டம்பர் 12ம் தேதி மரணமடைந்து விட்டது. இதுகுறித்த தகவலை பிரிட்டானி டேவிஸ் வெளியிட்டுள்ளார். ஜீயஸுடன் இருந்த நாட்கள் மிகவும் அருமையானது. அதற்காக மகிழ்கிறோம். பலரையும் ஜீயஸ் மகிழ்வித்தது. நிச்சயம் அதை நாங்கள் மிஸ் செய்வோம். அதன் புற்றுநோய்க்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை அளித்தோம். ஆனால் அதன் உடல் நலன் சிகிச்சையை ஏற்கவில்லை. மரணத்தைத் தழுவி விட்டது ஜீயஸ் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் பிரிட்டானி.
மரணமடைந்த ஜீயஸ் நாய்க்கு வயது 3 என்பது குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}