டெக்சாஸ்: உலகிலேயே உயரமான நாய் என்று கின்னஸ் சாதனை படைத்த ஜீயஸ் நாய் எலும்புப் புற்றுநோய்க்குப் பலியாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் பெட்போர்ட் நகரைச் சேர்ந்தவர் பிரிட்டானி டேவிஸ். இவரது வீட்டில்தான் ஜீயஸ் நாய் வாழ்ந்து வந்தது. தி கிரேட் டேன் வகை நாயாகும் இது. மிகவும் உயரமாக பார்க்கவே கம்பீரமாக இருக்கும். இதன் உயரம் 1.046 மீட்டராகும். அதாவது 3 அடி 5 அங்குலமாகும். அந்த அளவுக்கு உயரமான நாய் இது.
இந்த நாயின் உயரம் காரணமாக உலகிலேயே உயரமான நாய் என்று கின்னஸ் சாதனையும் படைத்திருந்தது. இந்த நாய்க்கு எலும்புப் புற்றுநோய் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் வலது கால் கூட சமீபத்தில் நோய் பாதிப்பு காரணமாக அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
நீண்ட காலமாக போராடி வந்த ஜீயஸ் நாய் செப்டம்பர் 12ம் தேதி மரணமடைந்து விட்டது. இதுகுறித்த தகவலை பிரிட்டானி டேவிஸ் வெளியிட்டுள்ளார். ஜீயஸுடன் இருந்த நாட்கள் மிகவும் அருமையானது. அதற்காக மகிழ்கிறோம். பலரையும் ஜீயஸ் மகிழ்வித்தது. நிச்சயம் அதை நாங்கள் மிஸ் செய்வோம். அதன் புற்றுநோய்க்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை அளித்தோம். ஆனால் அதன் உடல் நலன் சிகிச்சையை ஏற்கவில்லை. மரணத்தைத் தழுவி விட்டது ஜீயஸ் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் பிரிட்டானி.
மரணமடைந்த ஜீயஸ் நாய்க்கு வயது 3 என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}