- சு.தா.அறிவழகன்
விதி எழுதிய கணக்கை - உன்
மதி கொண்டு மாற்றி நின்றாய்!
உடல் சுமக்கும் குறையை - உன்
உயிரின் திறமையால் வென்று நின்றாய்!
முடங்கிப் போவது தடையல்ல - உன்
முயற்சிக்கு எல்லை ஏதுமில்ல!
சிறகுகள் இல்லாவிட்டாலும் - உன்
சிந்தனை வானில் தடை இல்லை!

கல்லும் கனியாகும் உன் கலைத்திறனில்!
சொல்லும் கவிதையாகும் உன் நாவினில்!
காலம் தலைவணங்கும் உன் விடாமுயற்சியில்!
வையம் வியந்து நிற்கும் உன் தனித்துவத்தில்!
குறை என்பது உடலுக்குத்தான் - அது
ஊக்கம் நிறைந்த உன் உள்ளத்திற்கு அல்ல!
தோல்வி என்பது உனக்கில்லை - நீ
தன்னம்பிக்கை செதுக்கிய வைரச் சிலை!
வானவில்லுக்கும் வளைந்தால்தான் அழகு,
உன் வாழ்வுக்கும் இந்த சவால்களே மெருகு!
நிகரற்ற சாதனை உனக்காகக் காத்திருக்கு,
நிமிர்ந்து நட... உலகம் உன் பக்கம் இருக்கு!
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}