- சு.தா.அறிவழகன்
விதி எழுதிய கணக்கை - உன்
மதி கொண்டு மாற்றி நின்றாய்!
உடல் சுமக்கும் குறையை - உன்
உயிரின் திறமையால் வென்று நின்றாய்!
முடங்கிப் போவது தடையல்ல - உன்
முயற்சிக்கு எல்லை ஏதுமில்ல!
சிறகுகள் இல்லாவிட்டாலும் - உன்
சிந்தனை வானில் தடை இல்லை!

கல்லும் கனியாகும் உன் கலைத்திறனில்!
சொல்லும் கவிதையாகும் உன் நாவினில்!
காலம் தலைவணங்கும் உன் விடாமுயற்சியில்!
வையம் வியந்து நிற்கும் உன் தனித்துவத்தில்!
குறை என்பது உடலுக்குத்தான் - அது
ஊக்கம் நிறைந்த உன் உள்ளத்திற்கு அல்ல!
தோல்வி என்பது உனக்கில்லை - நீ
தன்னம்பிக்கை செதுக்கிய வைரச் சிலை!
வானவில்லுக்கும் வளைந்தால்தான் அழகு,
உன் வாழ்வுக்கும் இந்த சவால்களே மெருகு!
நிகரற்ற சாதனை உனக்காகக் காத்திருக்கு,
நிமிர்ந்து நட... உலகம் உன் பக்கம் இருக்கு!
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}