- புதிய கம்பன்
வானென்னும் தேன்கூட்டில்
வழிந்ததென்னவோ மழைத்தேன்
தேனல்லவே தேனல்லவே
வழிந்ததெல்லாம் தேவாமிர்தம்.
யார் சேர்த்தது
யார் சேர்ப்பது
யார்தான் தேனீயாய் மாறியது.
மலையுள்ளது
மாபெரும் நிலமுள்ளது
இக்கூட்டில் வைக்க
எம்மலரில் தேனுள்ளது.
இலவம் இங்குள்ளது

இளம்பருத்தி இங்குள்ளது
இம்மாக்கூட்டை நெய்ய
எவர் வயிற்றில் மெழுகுள்ளது.
நீதானா
ஓ நீயேதானா தேன் சேர்த்தது
பூமியெங்கும் பூப்பூக்க செய்யும்
ஆதவனே
நீதானா தேன் சேர்த்தது
தேனீயாய் மாறிநின்றது.
கயமென்னும் மலர்தேடி
அனலென்னும் குழல்வைத்து
நீருறிஞ்சி நீராவியாய் தரித்து
நீதானா தேன் சேர்த்தது
மேகமெழுகை வேய்ந்து
மழைத்தேனை உள்நுழைத்தது.
ஆகாயம் என்று சொல்லி
ஆண்பாலில் யார் சேர்த்ததுன்னை
வான்கூட்டின் ராணித்தேனீயே
ஆண்பாலில் யார் சேர்த்ததுன்னை.
பாலினம் மாற்றி உன்னை
பெண்பாலில் பார்க்கையிலே
இன்னும் கூட அழகாய் நீ.
திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
ஓபிஎஸ் டெல்லி விசிட்...பாஜக., தலைவர்களுடன் சந்திப்பு...டெல்லியில் என்ன நடக்கிறது?
{{comments.comment}}