- புதிய கம்பன்
வானென்னும் தேன்கூட்டில்
வழிந்ததென்னவோ மழைத்தேன்
தேனல்லவே தேனல்லவே
வழிந்ததெல்லாம் தேவாமிர்தம்.
யார் சேர்த்தது
யார் சேர்ப்பது
யார்தான் தேனீயாய் மாறியது.
மலையுள்ளது
மாபெரும் நிலமுள்ளது
இக்கூட்டில் வைக்க
எம்மலரில் தேனுள்ளது.
இலவம் இங்குள்ளது

இளம்பருத்தி இங்குள்ளது
இம்மாக்கூட்டை நெய்ய
எவர் வயிற்றில் மெழுகுள்ளது.
நீதானா
ஓ நீயேதானா தேன் சேர்த்தது
பூமியெங்கும் பூப்பூக்க செய்யும்
ஆதவனே
நீதானா தேன் சேர்த்தது
தேனீயாய் மாறிநின்றது.
கயமென்னும் மலர்தேடி
அனலென்னும் குழல்வைத்து
நீருறிஞ்சி நீராவியாய் தரித்து
நீதானா தேன் சேர்த்தது
மேகமெழுகை வேய்ந்து
மழைத்தேனை உள்நுழைத்தது.
ஆகாயம் என்று சொல்லி
ஆண்பாலில் யார் சேர்த்ததுன்னை
வான்கூட்டின் ராணித்தேனீயே
ஆண்பாலில் யார் சேர்த்ததுன்னை.
பாலினம் மாற்றி உன்னை
பெண்பாலில் பார்க்கையிலே
இன்னும் கூட அழகாய் நீ.
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!
யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை
யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த 30 உறுப்பினர்கள்
பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு
பல ஆயிரம் கோடி லஞ்சம்... இது தான் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சாதனைகள்: அண்ணாமலை
கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்
கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
{{comments.comment}}