கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கொடியத்தூர் பிடிஎம் மேல் நிலைப்பள்ளி டபுள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. காரணம் சூப்பர் ஸ்வீட்டானது. இந்தப் பள்ளியில் படித்து வரும் 13 ஜோடி இரட்டையர்களும், பத்தாவது வகுப்பு தேர்வில் சூப்பராக பாஸ் செய்துள்ளனர்.
இந்த 13 ஜோடியுமே சாதாரணமாக பாஸ் செய்யவில்லை. நல்ல மார்க் எடுத்து பாஸாகி அசத்தியுள்ளனர். இந்த 26 பேரும் பிறந்தது முதல் ஒன்றாக படித்து வரும் நல்ல நட்புக்களும் கூட என்பதுதான் இங்கு விசேஷமானது.
இப்போது சேர்ந்து படிக்கிறோம். எதிர்காலத்தில் சேர்ந்தே வேலை பார்க்க வேண்டும் என்பதே எங்களது பேராசை. கடைசி வரை பிரியாமல் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம் என்று இந்த இரட்டையர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
கோழிக்கோடு மாவட்டத்திலேயே பிடிஎம் பள்ளியிலிருந்துதான் அதிக அளவிலான இரட்டையர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், இவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள். இணைந்தே படிப்பார்கள். யாருக்காவது ஏதாவது சந்தேகம் வந்தால் மற்றவர்கள் வந்து உதவுவார்கள். இவர்களைப் போல ஒற்றுமையானவர்களை பார்க்கவே முடியாது. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் சேர்ந்துதான் படிக்கிறார்கள். இப்போது சேர்ந்து வெற்றிகளைச் சுவைக்க ஆரம்பித்துள்ளனர் என்றார்.
கேரளாவில் பல பள்ளிகளில் அதிக அளவிலான இரட்டையர்கள் படித்து வருவது சகஜமான விஷயமாகும். அந்த வகையில் கோழிக்கோடு பிடிஎம் பள்ளி இரட்டையர்கள் அசத்தலான வெற்றியைப் பெற்று அனைவருக்கும் மிகச் சிறந்த ரோல் மாடல்களாக மாறியுள்ளனர்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}