கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கொடியத்தூர் பிடிஎம் மேல் நிலைப்பள்ளி டபுள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. காரணம் சூப்பர் ஸ்வீட்டானது. இந்தப் பள்ளியில் படித்து வரும் 13 ஜோடி இரட்டையர்களும், பத்தாவது வகுப்பு தேர்வில் சூப்பராக பாஸ் செய்துள்ளனர்.
இந்த 13 ஜோடியுமே சாதாரணமாக பாஸ் செய்யவில்லை. நல்ல மார்க் எடுத்து பாஸாகி அசத்தியுள்ளனர். இந்த 26 பேரும் பிறந்தது முதல் ஒன்றாக படித்து வரும் நல்ல நட்புக்களும் கூட என்பதுதான் இங்கு விசேஷமானது.
இப்போது சேர்ந்து படிக்கிறோம். எதிர்காலத்தில் சேர்ந்தே வேலை பார்க்க வேண்டும் என்பதே எங்களது பேராசை. கடைசி வரை பிரியாமல் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம் என்று இந்த இரட்டையர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

கோழிக்கோடு மாவட்டத்திலேயே பிடிஎம் பள்ளியிலிருந்துதான் அதிக அளவிலான இரட்டையர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், இவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள். இணைந்தே படிப்பார்கள். யாருக்காவது ஏதாவது சந்தேகம் வந்தால் மற்றவர்கள் வந்து உதவுவார்கள். இவர்களைப் போல ஒற்றுமையானவர்களை பார்க்கவே முடியாது. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் சேர்ந்துதான் படிக்கிறார்கள். இப்போது சேர்ந்து வெற்றிகளைச் சுவைக்க ஆரம்பித்துள்ளனர் என்றார்.
கேரளாவில் பல பள்ளிகளில் அதிக அளவிலான இரட்டையர்கள் படித்து வருவது சகஜமான விஷயமாகும். அந்த வகையில் கோழிக்கோடு பிடிஎம் பள்ளி இரட்டையர்கள் அசத்தலான வெற்றியைப் பெற்று அனைவருக்கும் மிகச் சிறந்த ரோல் மாடல்களாக மாறியுள்ளனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}