- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 11 :
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

பொருள் :
கன்றுக்குட்டிகளுடன் இருக்கும் கறவை பசுக்கள் சுரக்கின்ற பாலினை கறக்கும் தொழில் செய்பவர்கள் ஆயர்குலத்தினர். அது மட்டுமல்ல தேடி வரும் பகைவர்கள் எவ்வளவு பலசாலிகளாக இருந்தாலும் அவர்களை போரிட்டு வெற்றிக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். அப்படிப்பட்ட குற்றமில்லாத பசுக்களை வைத்திருக்கும் குலத்தில் தோன்றிய கொடி போன்ற உடலை உடைய பெண்ணே!புற்றில் இருக்கும் பாம்பு படம் எடுத்தது போல் பறந்த நெற்றியையும், மயில் தோகை விரித்தது போன்ற நீண்ட கூந்தலையும் உடையவளே. நீ இப்படி தூங்கிக் கொண்டிருப்பது சரி தானா? சுற்றி உள்ள வீடுகளில் இருக்கும் அனைத்து தோழிகளும் வந்து உன்னுடைய வீட்டின் முன் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். உன்னுடைய வீட்டின் வாசலுக்கு வந்து, மழையை பொழிந்திடும் கருமையான மேகங்களை போல் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்திடும் கண்ணனின் திருநாமங்களை பாடிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் மிகுந்த செல்வ செழிப்புடன் செல்லமாக வளர்க்கப்படும் செல்வந்தரின் பெண்ணாகிய நீ இப்படி பேசாமல் இருக்கலாமா? எழுந்து வந்து எங்களுடன் சேர்ந்து நீயும் கண்ணனின் பெருமைகளை போற்றி பாடிடு பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?
நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!
{{comments.comment}}