மார்கழி 11 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 11.. செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்!

Dec 25, 2024,04:46 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 11 :


செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.




பொருள் :


கன்றுக்குட்டிகளுடன் இருக்கும் கறவை பசுக்கள் சுரக்கின்ற பாலினை கறக்கும் தொழில் செய்பவர்கள் ஆயர்குலத்தினர். அது மட்டுமல்ல தேடி வரும்  பகைவர்கள் எவ்வளவு பலசாலிகளாக இருந்தாலும் அவர்களை போரிட்டு வெற்றிக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். அப்படிப்பட்ட குற்றமில்லாத பசுக்களை வைத்திருக்கும் குலத்தில் தோன்றிய கொடி போன்ற உடலை உடைய பெண்ணே!புற்றில் இருக்கும் பாம்பு படம் எடுத்தது போல் பறந்த நெற்றியையும், மயில் தோகை விரித்தது போன்ற நீண்ட கூந்தலையும் உடையவளே. நீ இப்படி தூங்கிக் கொண்டிருப்பது சரி தானா? சுற்றி உள்ள வீடுகளில் இருக்கும் அனைத்து தோழிகளும் வந்து உன்னுடைய வீட்டின் முன் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். உன்னுடைய வீட்டின் வாசலுக்கு வந்து, மழையை பொழிந்திடும் கருமையான மேகங்களை போல் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்திடும் கண்ணனின் திருநாமங்களை பாடிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் மிகுந்த செல்வ செழிப்புடன் செல்லமாக வளர்க்கப்படும் செல்வந்தரின் பெண்ணாகிய நீ இப்படி பேசாமல் இருக்கலாமா? எழுந்து வந்து எங்களுடன் சேர்ந்து நீயும் கண்ணனின் பெருமைகளை போற்றி பாடிடு பெண்ணே.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்