- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 11 :
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

பொருள் :
கன்றுக்குட்டிகளுடன் இருக்கும் கறவை பசுக்கள் சுரக்கின்ற பாலினை கறக்கும் தொழில் செய்பவர்கள் ஆயர்குலத்தினர். அது மட்டுமல்ல தேடி வரும் பகைவர்கள் எவ்வளவு பலசாலிகளாக இருந்தாலும் அவர்களை போரிட்டு வெற்றிக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். அப்படிப்பட்ட குற்றமில்லாத பசுக்களை வைத்திருக்கும் குலத்தில் தோன்றிய கொடி போன்ற உடலை உடைய பெண்ணே!புற்றில் இருக்கும் பாம்பு படம் எடுத்தது போல் பறந்த நெற்றியையும், மயில் தோகை விரித்தது போன்ற நீண்ட கூந்தலையும் உடையவளே. நீ இப்படி தூங்கிக் கொண்டிருப்பது சரி தானா? சுற்றி உள்ள வீடுகளில் இருக்கும் அனைத்து தோழிகளும் வந்து உன்னுடைய வீட்டின் முன் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். உன்னுடைய வீட்டின் வாசலுக்கு வந்து, மழையை பொழிந்திடும் கருமையான மேகங்களை போல் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்திடும் கண்ணனின் திருநாமங்களை பாடிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் மிகுந்த செல்வ செழிப்புடன் செல்லமாக வளர்க்கப்படும் செல்வந்தரின் பெண்ணாகிய நீ இப்படி பேசாமல் இருக்கலாமா? எழுந்து வந்து எங்களுடன் சேர்ந்து நீயும் கண்ணனின் பெருமைகளை போற்றி பாடிடு பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}