- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 15 :
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனகென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் என்பாவாய்.

பொருள் :
சின்னஞ்சிறு கிளி போன்ற அழகிய பெண்ணே! இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறாய்! சில்லென்ற இந்த காலை நேரத்தில் உனக்காக வந்து நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என கோபத்துடன் அழைக்கும் தோழிகளுக்கு, வீட்டிற்குள் இருக்கும் பெண், கோபப்படாதீர்கள் இதோ வந்து விட்டேன். எனக்கு பேசத் தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாக இருந்து கொள்ளுங்கள் என கோபமாக பதிலளிக்கிறாள். அதற்கு வெளியில் காத்திருக்கும் தோழிகள், நாங்கள் அனைவரும் முன்பே வந்து காத்துருக் கொண்டிருக்கிறோம். அப்படி என்ன எங்களிடம் இல்லாத சிறப்பு உன்னிடம் உள்ளது? என கேட்கிறார்கள்.
அதற்கு வீட்டிற்குள் இருக்கும் பெண்ணும், என்னவோ நான் மட்டும் தான் தாமதமாக எழுவது போல் பேசுகிறீர்கள். மற்ற அனைவரும் வந்து விட்டார்களா? என கேட்ட, வெளியில் இருக்கும் பெண்கள், இப்படியே கேள்விகளாக கேட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருப்பாயா? வெளியில் வந்து நீயே அனைவரையும் எண்ணிப் பார்த்துக் கொள். வலிமை மிக்க குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடி அழிக்கும் திறமையும் மிக்க மாய கண்ணனை வணங்கி, போற்றி பாடி புண்ணியங்கள் பலவற்றை பெறுவதற்காக சீக்கிரம் எங்களுடன் கலந்து கொள்ள வெளியே வா என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
International Yoga Day: செய்யும் வழி யோக வழி! உய்யும் உன் தேக வலி!
சர்வதேச யோகா தினம்: அமைதியே ஆன்மா.. மூச்சுப் பயிற்சியே மூலதனம்!
Father's day Poem: என் இயக்கம் அப்பா!
Happy Father's Day: அப்பாவின் அன்பு !
Happy Father's day: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
Father's Day: தந்தை எனும் கோயில்!- கலைவாணி ராமு
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
{{comments.comment}}