- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 15 :
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனகென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் என்பாவாய்.
பொருள் :
சின்னஞ்சிறு கிளி போன்ற அழகிய பெண்ணே! இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறாய்! சில்லென்ற இந்த காலை நேரத்தில் உனக்காக வந்து நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என கோபத்துடன் அழைக்கும் தோழிகளுக்கு, வீட்டிற்குள் இருக்கும் பெண், கோபப்படாதீர்கள் இதோ வந்து விட்டேன். எனக்கு பேசத் தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாக இருந்து கொள்ளுங்கள் என கோபமாக பதிலளிக்கிறாள். அதற்கு வெளியில் காத்திருக்கும் தோழிகள், நாங்கள் அனைவரும் முன்பே வந்து காத்துருக் கொண்டிருக்கிறோம். அப்படி என்ன எங்களிடம் இல்லாத சிறப்பு உன்னிடம் உள்ளது? என கேட்கிறார்கள்.
அதற்கு வீட்டிற்குள் இருக்கும் பெண்ணும், என்னவோ நான் மட்டும் தான் தாமதமாக எழுவது போல் பேசுகிறீர்கள். மற்ற அனைவரும் வந்து விட்டார்களா? என கேட்ட, வெளியில் இருக்கும் பெண்கள், இப்படியே கேள்விகளாக கேட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருப்பாயா? வெளியில் வந்து நீயே அனைவரையும் எண்ணிப் பார்த்துக் கொள். வலிமை மிக்க குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடி அழிக்கும் திறமையும் மிக்க மாய கண்ணனை வணங்கி, போற்றி பாடி புண்ணியங்கள் பலவற்றை பெறுவதற்காக சீக்கிரம் எங்களுடன் கலந்து கொள்ள வெளியே வா என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
{{comments.comment}}