மார்கழி 15 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 15 - எல்லே இளங்கிளியே.. இன்னும் உறங்குதியோ!

Dec 29, 2024,04:28 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 15 :


எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!

சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்

வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக

ஒல்லை நீ போதாய் உனகென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் என்பாவாய்.




பொருள் :


சின்னஞ்சிறு கிளி போன்ற அழகிய பெண்ணே! இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறாய்! சில்லென்ற இந்த காலை நேரத்தில் உனக்காக வந்து நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என கோபத்துடன் அழைக்கும் தோழிகளுக்கு, வீட்டிற்குள் இருக்கும் பெண், கோபப்படாதீர்கள் இதோ வந்து விட்டேன். எனக்கு பேசத் தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாக இருந்து கொள்ளுங்கள் என கோபமாக பதிலளிக்கிறாள். அதற்கு வெளியில் காத்திருக்கும் தோழிகள், நாங்கள் அனைவரும் முன்பே வந்து காத்துருக் கொண்டிருக்கிறோம். அப்படி என்ன எங்களிடம் இல்லாத சிறப்பு உன்னிடம் உள்ளது? என கேட்கிறார்கள்.


அதற்கு வீட்டிற்குள் இருக்கும் பெண்ணும், என்னவோ நான் மட்டும் தான் தாமதமாக எழுவது போல் பேசுகிறீர்கள். மற்ற அனைவரும் வந்து விட்டார்களா? என கேட்ட, வெளியில் இருக்கும் பெண்கள், இப்படியே கேள்விகளாக கேட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருப்பாயா? வெளியில் வந்து நீயே அனைவரையும் எண்ணிப் பார்த்துக் கொள். வலிமை மிக்க குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடி அழிக்கும் திறமையும் மிக்க மாய கண்ணனை வணங்கி, போற்றி பாடி புண்ணியங்கள் பலவற்றை பெறுவதற்காக சீக்கிரம் எங்களுடன் கலந்து கொள்ள வெளியே வா என்கிறார்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்

news

திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!

news

Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?

news

ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!

news

வெயில் தீவிரம்: பட்டாசு ஆலை, பெட்ரோல் பங்குகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்:செல்வப்பெருந்தகை

news

போர் பதற்றம்: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5200 உயர்வு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா

news

இரண்டு நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை

அதிகம் பார்க்கும் செய்திகள்