மார்கழி 18 - ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 18 - உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

Jan 01, 2025,04:08 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 18:


உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்

கந்தம் கமழும் குழலி கடை திறவாய்

வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.




பொருள் :


வலிமையான, போர் திறன்மிக்க யானைகளை வைத்திருப்பவனும், போரில் பின் வாங்காத தோள் வலிமையும் உடையவனுமான நந்தகோபனின் மருமகளாகிய நப்பின்னை பிராட்டியே! நீ வாசனை மிகுந்த கூந்தலை உடையவள். வந்து உன்னுடைய வீட்டின் கதவை திறந்திடு. கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்திலும் இருந்து கேட்கிறது. கொடிகள் படர்ந்திருக்கும் மரங்களின் மீது குயில்கள் பாட துவங்கி விட்டன. பூக்களை போன்ற மென்மையான விரல்களை உடையவளே உன்னுடைய மைத்தனரான கண்ணனின் புகழை பாடுவதற்காக நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம். உன்னுடைய பூ போன்ற கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலி எழுந்து வந்து, எங்களின் உள்ளம் மகிழ்ச்சி அடையும் படி கதவை திறந்து அருள் செய்ய வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருவண்ணாமலை தீபத் திருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

news

SIR விழிப்புணர்வு.. ஆவின் நிறுவனத்தின் சூப்பர் ஐடியா.. பால் பாக்கெட்டில் அபாரம்!

news

Gentleman driver of the Year .. வெனிஸ் நகரில் விருது வென்ற அஜீத்குமார்... ஷாலினி பெருமிதம்

news

Today Gold Silver Rate:வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சரவனுக்கு ரூ.880 குறைவு...

news

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு.. ஜனாதிபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 24, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!

news

திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்