- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 18:
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
வலிமையான, போர் திறன்மிக்க யானைகளை வைத்திருப்பவனும், போரில் பின் வாங்காத தோள் வலிமையும் உடையவனுமான நந்தகோபனின் மருமகளாகிய நப்பின்னை பிராட்டியே! நீ வாசனை மிகுந்த கூந்தலை உடையவள். வந்து உன்னுடைய வீட்டின் கதவை திறந்திடு. கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்திலும் இருந்து கேட்கிறது. கொடிகள் படர்ந்திருக்கும் மரங்களின் மீது குயில்கள் பாட துவங்கி விட்டன. பூக்களை போன்ற மென்மையான விரல்களை உடையவளே உன்னுடைய மைத்தனரான கண்ணனின் புகழை பாடுவதற்காக நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம். உன்னுடைய பூ போன்ற கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலி எழுந்து வந்து, எங்களின் உள்ளம் மகிழ்ச்சி அடையும் படி கதவை திறந்து அருள் செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
வரைவு SOP வெளியானது.. விஜய் கூட்டத்துக்கு இனி.. ரூ. 20 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டியிருக்கும்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ICC தயவு செய்து முதல்ல இந்த ரூல்ஸை மாத்துங்க ப்ளீஸ்.. இர்பான் பதான் கோரிக்கை
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
வந்தே மாதரம்.. 150வது ஆண்டைக் கொண்டாடும் இந்தியாவின் தேசியப் பாடல்!
மீண்டும் சரிவை நோக்கி சரிந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 சரிந்தது!
அறிவுப்பூர்வமான செய்தியாளர்கள் அருகிப் போனது ஏன்?
{{comments.comment}}