- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 18:
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
வலிமையான, போர் திறன்மிக்க யானைகளை வைத்திருப்பவனும், போரில் பின் வாங்காத தோள் வலிமையும் உடையவனுமான நந்தகோபனின் மருமகளாகிய நப்பின்னை பிராட்டியே! நீ வாசனை மிகுந்த கூந்தலை உடையவள். வந்து உன்னுடைய வீட்டின் கதவை திறந்திடு. கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்திலும் இருந்து கேட்கிறது. கொடிகள் படர்ந்திருக்கும் மரங்களின் மீது குயில்கள் பாட துவங்கி விட்டன. பூக்களை போன்ற மென்மையான விரல்களை உடையவளே உன்னுடைய மைத்தனரான கண்ணனின் புகழை பாடுவதற்காக நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம். உன்னுடைய பூ போன்ற கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலி எழுந்து வந்து, எங்களின் உள்ளம் மகிழ்ச்சி அடையும் படி கதவை திறந்து அருள் செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Festive month.. வருடத்தின் கடைசி மாதம்தான்.. ஆனால் அடுத்த ஆண்டின் வெற்றிக்கான வழிகாட்டி!
சிக்கன்நெக் பகுதியில் செக் வைத்த இந்தியா.. வங்கதேசத்தின் வியூகத்திற்கு பதிலடி!
வெயிட்டான 8 டிப்ஸ்.. சற்று பழகித்தான் பாருங்களேன்.. நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?
டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
ஆல் பாஸ்.. ஒரு ஃபீல் குட் மூவி.. பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி, சசிக்குமார்
பிரண்டை துவையல்.. டேஸ்ட்டானது.. உடம்புக்கு ரொம்ப பூஸ்ட்டானதும் கூட!
சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்
{{comments.comment}}