- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 18:
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
வலிமையான, போர் திறன்மிக்க யானைகளை வைத்திருப்பவனும், போரில் பின் வாங்காத தோள் வலிமையும் உடையவனுமான நந்தகோபனின் மருமகளாகிய நப்பின்னை பிராட்டியே! நீ வாசனை மிகுந்த கூந்தலை உடையவள். வந்து உன்னுடைய வீட்டின் கதவை திறந்திடு. கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்திலும் இருந்து கேட்கிறது. கொடிகள் படர்ந்திருக்கும் மரங்களின் மீது குயில்கள் பாட துவங்கி விட்டன. பூக்களை போன்ற மென்மையான விரல்களை உடையவளே உன்னுடைய மைத்தனரான கண்ணனின் புகழை பாடுவதற்காக நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம். உன்னுடைய பூ போன்ற கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலி எழுந்து வந்து, எங்களின் உள்ளம் மகிழ்ச்சி அடையும் படி கதவை திறந்து அருள் செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}