- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 20 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 20 : முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
திருப்பாவை பாசுரம் 20 :
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் கவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

பொருள் :
முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் முன் சென்று பக்தர்களின் துயரத்தை போக்கி, காத்திடும் கலியுக தெய்வமே! நீ எழுந்திருக்க வேண்டும். பகைவர்களை நடுக்க வைக்கும் போர் திறம் கொண்ட தூயவனே தூக்கத்தில் இருந்து எழுந்திரு. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களையும், பவளம் போன்ற சிவந்த வாயையும், சிற்றிடையையும் கொண்ட நப்பினாய் பெண்ணே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுந்து வா. எங்களுக்கு விசிறி, கண்ணாடி போன்ற மங்கல பொருட்களை, உன்னுடைய கணவனாகி கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள் மழையில் நனைய செய்திடுவாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
{{comments.comment}}