மார்கழி 20 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 20 : முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

Jan 03, 2025,04:38 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 20 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 20 : முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று


திருப்பாவை பாசுரம் 20 :


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் கவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!

செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.




பொருள் : 


முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் முன் சென்று பக்தர்களின் துயரத்தை போக்கி, காத்திடும் கலியுக தெய்வமே! நீ எழுந்திருக்க வேண்டும். பகைவர்களை நடுக்க வைக்கும் போர் திறம் கொண்ட தூயவனே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.  பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களையும், பவளம் போன்ற சிவந்த வாயையும், சிற்றிடையையும் கொண்ட நப்பினாய் பெண்ணே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுந்து வா. எங்களுக்கு விசிறி, கண்ணாடி போன்ற மங்கல பொருட்களை, உன்னுடைய கணவனாகி கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள் மழையில் நனைய செய்திடுவாயாக.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் நாளை திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

தெறிக்க விட்ட 'Thalaivar 174'டீசர்...ஹீரோ ரஜினியா? கமலா?...இவ்வளவு விஷயம் பண்ணிருக்காங்கலே

news

சீமான் போட்டியிடப் போவது எங்கே.. திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார்!

news

கே. என். நேரு வசம் 41 தொகுதிகள் மட்டுமல்ல.. திமுகவின் மொத்தக் கோட்டையுமே இருக்கு!

news

திமுக அமைத்துள்ள 7 பேர் குழு...கூட்டணி கட்சிகளிடம் இவர்கள் என்ன பேசுவார்கள்?

news

கமல்ஹாசனின் நம்பிக்கை.. ரஜினிகாந்த்தின் பெருந்தன்மை.. பெயரில் என்ன இருக்கு?

news

என்ன சார் சொல்ல வர்றீங்க?...திமுக கூட்டணி பற்றி கமல் சொன்ன பதில்...குழம்பிய செய்தியாளர்கள்

news

47 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்!

news

தாய் மொழியாகிய தமிழ் மொழியே நம் தமிழரின் தனி அடையாளமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்