திருப்பாவை பாசுரம் 9 :
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளே?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பொருள் :
அழகிய நவரத்தினங்கள் மின்ன, மணிகள் கட்டப்பட்டுள்ள மாடங்களில் விளக்கேறிய கட்டப்பட்டுள்ள மாளிகை வீட்டில், இனிமையான நறுமணங்கள் வீசும் பஞ்சு படுக்கையின் சுகமாக படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மாமனின் மகளே எழுந்து வந்து உங்கள் வீட்டின் கதவினை திற. மாமனின் துணைவியாகிய மாமியே உன்னுடைய மகளை எழுப்புங்கள். நாங்கள் இவ்வளவு கூப்பிட்டும் எழுந்திருக்காமல், பதிலும் சொல்லாமல் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் உன்னுடைய மகளுக்கு காதுகள் கேட்காதா இல்லை அவளுக்கு பேச தான் முடியாதா? சோம்பல் அவளை அந்த அளவிற்கு ஆட்கொண்டு விட்டதா? மந்திரத்திற்கு கட்டுப்பட்டு விட்டவள் போல் ஏன் இப்படி ஒரு தூக்கம் தூங்குகிறாள்? பலவிதமான மாயங்கள் செய்திடும் மாதவன், வைகுண்டத்தின் தலைவனான விளங்கும் நாராயணனின் நாமங்கள் பலவற்றையும் போற்றி பாடி, எங்களுடன் சேர்ந்து நீயும் நலன்கள் பலவற்றையும் பெறுவதற்காக எழுந்து வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மனதிற்கு இனிய கணவன் கிடைக்க அருளும் அதிஅற்புத நோன்பு. பாவை நோன்பு....!
மூல முதற் கடவுள்.. விநாயகருக்கு அப் பெயர் வரக் காரணம் என்ன.. தெரியுமா உங்களுக்கு?
கார்த்திகை சோமவார (கடைசி திங்கட்கிழமை) சங்காபிஷேகம்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
{{comments.comment}}