மார்கழி 9 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 9.. தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய!

Dec 23, 2024,05:11 PM IST

திருப்பாவை பாசுரம் 9 :


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்

மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்

ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளே?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.




பொருள் : 


அழகிய நவரத்தினங்கள் மின்ன, மணிகள் கட்டப்பட்டுள்ள மாடங்களில் விளக்கேறிய கட்டப்பட்டுள்ள மாளிகை வீட்டில், இனிமையான நறுமணங்கள் வீசும் பஞ்சு படுக்கையின் சுகமாக படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மாமனின் மகளே எழுந்து வந்து உங்கள் வீட்டின் கதவினை திற. மாமனின் துணைவியாகிய மாமியே உன்னுடைய மகளை எழுப்புங்கள். நாங்கள் இவ்வளவு கூப்பிட்டும் எழுந்திருக்காமல், பதிலும் சொல்லாமல் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் உன்னுடைய மகளுக்கு காதுகள் கேட்காதா இல்லை அவளுக்கு பேச தான் முடியாதா? சோம்பல் அவளை அந்த அளவிற்கு ஆட்கொண்டு விட்டதா? மந்திரத்திற்கு கட்டுப்பட்டு விட்டவள் போல் ஏன் இப்படி ஒரு தூக்கம் தூங்குகிறாள்? பலவிதமான மாயங்கள் செய்திடும் மாதவன், வைகுண்டத்தின் தலைவனான விளங்கும் நாராயணனின் நாமங்கள் பலவற்றையும் போற்றி பாடி, எங்களுடன் சேர்ந்து நீயும் நலன்கள் பலவற்றையும் பெறுவதற்காக எழுந்து வா பெண்ணே.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

Sripriya Short stories: பசிக்க விடு, பலமாக வளரும்!

news

ஈஸ்டர் திருநாள்.. உயிர்த்தெழுந்த நாயகன்!

news

சிலுவையை மீட்பின் அடையாளமாக்கியவரே!

news

உயிர்த்தெழுந்த நம்பிக்கை – ஈஸ்டர் திருநாளின் அழகான கதை

news

தேர்தலில் போட்டியிடாதது ஏன்?.. இதுதாங்கண்ணா காரணம்.. வேற ஒன்னும் இல்லை.. அண்ணாமலை விளக்கம்

news

புதுச்சேரியில் ரோடுஷோ...ரசிகர்களின் அல்ட்ராசிட்டியால் பதறி போன விஜய்

news

தமிழகத்தில் ஏப்ரல் 7 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னைக்கு மட்டும் கிடையாதாம்

news

தமிழக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்கள்...தேர்தலுக்கு 18 நாட்கள்

news

மதுரை Rapido ஆட்டோ சேவையில் கட்டண குழப்பம்.. ஆப் காட்டிய கட்டணம் ஒன்று.. டிரைவர் கேட்பது வேறு!

அதிகம் பார்க்கும் செய்திகள்