திருப்பாவை பாசுரம் 9 :
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளே?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பொருள் :
அழகிய நவரத்தினங்கள் மின்ன, மணிகள் கட்டப்பட்டுள்ள மாடங்களில் விளக்கேறிய கட்டப்பட்டுள்ள மாளிகை வீட்டில், இனிமையான நறுமணங்கள் வீசும் பஞ்சு படுக்கையின் சுகமாக படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மாமனின் மகளே எழுந்து வந்து உங்கள் வீட்டின் கதவினை திற. மாமனின் துணைவியாகிய மாமியே உன்னுடைய மகளை எழுப்புங்கள். நாங்கள் இவ்வளவு கூப்பிட்டும் எழுந்திருக்காமல், பதிலும் சொல்லாமல் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் உன்னுடைய மகளுக்கு காதுகள் கேட்காதா இல்லை அவளுக்கு பேச தான் முடியாதா? சோம்பல் அவளை அந்த அளவிற்கு ஆட்கொண்டு விட்டதா? மந்திரத்திற்கு கட்டுப்பட்டு விட்டவள் போல் ஏன் இப்படி ஒரு தூக்கம் தூங்குகிறாள்? பலவிதமான மாயங்கள் செய்திடும் மாதவன், வைகுண்டத்தின் தலைவனான விளங்கும் நாராயணனின் நாமங்கள் பலவற்றையும் போற்றி பாடி, எங்களுடன் சேர்ந்து நீயும் நலன்கள் பலவற்றையும் பெறுவதற்காக எழுந்து வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}