திருவள்ளுவர் தினம்.. 9 பேருக்கு விருதுகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்!

Jan 15, 2025,11:03 AM IST

சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி 9 முக்கியப் பிரமுகர்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.


திருவள்ளுவர் தினம் ஆண்டு தோறும் ஜனவரி 15ம் தேதி தமிழ்நாடு அரசால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று திருவள்ளுவர் ஆண்டு 2056 பிறக்கிறது. திருவள்ளுவர் ஆண்டை எப்படி கணக்கிட வேண்டும் என்றால், ஆங்கில வருடத்துடன் 31 வருடங்களைக் கூட்டிக் கொண்டால் வருவதுதான் திருவள்ளுவர் ஆண்டாகும். கடந்த 1971ம் ஆண்டு முதல் இது அமலில் இருந்து வருகிறது.


ஒவ்வொரு திருவள்ளுவர் தினத்தன்றும் தமிழ்நாடு அரசு 9 துறைகளில் விருதுகளை வழங்கிக் கெளரவித்து வருகிறது. அதன்படி  2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024-ஆம் ஆண்டிற்கான மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, பேரறிஞர் அண்ணா விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய 9 விருதுகளுக்குரிய பிரமுகர்கள் அறிவிக்கப்பட்டனர்.




சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த 9 பேருக்கும் விருதுகளை வழங்கினார். அதன்படி, 2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பெரும் புலவர் மு.படிக்கராமு்கு வழங்கப்பட்டது. 


2024ம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலன், பாவேந்தர் பாரதிதாசன் விருது பேரொளி பொன். செல்வகணபதி, தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது - டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - வே.மு. பொதியவெற்பன், தந்தை பெரியார் விருது - விடுதலை ராஜேந்திரன், பேரறிஞர் அண்ணா விருது எல். கணேசன், அண்ணல் அம்பேத்கர் விருது விசிக எம்பி ரவிக்குமார், முத்தமிழறிஞர் கலைஞர் விருது முத்துவவாசி ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அந்த 4 M இருக்கு பாத்தீங்களா.. அதை மட்டும் கன்ட்ரோல் பண்ணுங்க.. நீங்கதான் பெஸ்ட்!

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

ஆம்புலன்ஸ் தெரியும்.. அதுக்கு ஏன் அந்தப் பேரு வந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா?

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

news

ஈரான் இறக்குமதி பாதிப்பு...தத்தளிக்கும் தூத்துக்குடி தீப்பெட்டித் தொழில்

news

தவெக வேட்பாளர்களுடன் விஜய் நேர்காணல் ...அப்போ சிபிஐ சம்மன் என்னாச்சு?

அதிகம் பார்க்கும் செய்திகள்