திருவண்ணாமலை மலை  தீபத் திருவிழா முடிந்தது.. கொப்பரை கீழே வந்தது.. 27ம் தேதி "பிரசாத மை"!

Dec 07, 2023,11:26 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலை தீபத்திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. வருகிற 27ம் தேதி ஆருத்ர தரிசனத்தில் போது பிரசாத மை பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருவிழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். 

கடந்த மாதம் 26ம் தேதி கோயிலுக்குள் பரணி தீபம் எற்பட்டது. அதன் பின்னர் கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் உள்ள மலைக்கோயில் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் மலை உச்சியில் 11 நாட்களுக்கு  மாலை 6 மணிக்கு ஏற்றப்படும். இந்த தீப தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு  தரிசனம் செய்வர். அத்தகைய சிறப்புடைய மகா தீபக் காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து இன்று காலை மகாதீபம் ஏற்றப்பட்ட தீபக் கொப்பரை மலை உச்சியிலிருந்து அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 



கோயிலில்,  தீபம் ஏற்றப்படும் கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக  வைக்கப்பட்டுள்ளது. இந்த கொப்பரையில் இருந்து கிடைக்கும் மகா தீபம் மை மிகவும் சிறப்புடையதாகும். வருகிற 27ம் தேதி ஆருத்ர தரிசனம் நடைபெறும் அன்று நடராஜருக்கு தீப மை அணிவிக்கப்படும். அதன் பின்னர் அந்த மை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்