- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 16 திருவெம்பாவை பாசுரம் 16 - முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
திருவெம்பாவை 16 :
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.

பொருள் :
கடல் நீர் முழுவதையும் முன்பே குடித்து விட்டு, மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதி தேவியைப் போல் கருத்து இருக்கின்றன. அவளின் சிற்றிடை போல் மின்னல்கள் தெறித்து ஓடுகின்றன. அவளின் திருவடியில் இருக்கும் சிலம்புகள் சினுங்குவதை போல் ஒலி எழுப்பு இடி முழங்குகிறது. அவளது நெளிந்த புருவங்களைப் போல் வானவில் காட்சி தருகிறது. வள்ளலை போல் அடியார்களுக்கு வேண்டிய அனைத்தையம் தரும் சிவ பெருமானை பிரியாமல் எப்போது அவரது உடலில் ஒரு பாதியாக சேர்ந்தே இருக்கும் தேவியான அவள், தன்னுடைய கணவரை கணங்கும் பக்தர்களுக்கு கருணை சுரக்க ஓடி வந்து முன்னின்று காப்பவள். மழையை பொலியும் மேகங்களை போல் கருணை மழை பொழிபவள். அவளின் கருணையை போல் மழையே நீயும் விடாமல் பொழிய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}