- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 16 திருவெம்பாவை பாசுரம் 16 - முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
திருவெம்பாவை 16 :
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.

பொருள் :
கடல் நீர் முழுவதையும் முன்பே குடித்து விட்டு, மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதி தேவியைப் போல் கருத்து இருக்கின்றன. அவளின் சிற்றிடை போல் மின்னல்கள் தெறித்து ஓடுகின்றன. அவளின் திருவடியில் இருக்கும் சிலம்புகள் சினுங்குவதை போல் ஒலி எழுப்பு இடி முழங்குகிறது. அவளது நெளிந்த புருவங்களைப் போல் வானவில் காட்சி தருகிறது. வள்ளலை போல் அடியார்களுக்கு வேண்டிய அனைத்தையம் தரும் சிவ பெருமானை பிரியாமல் எப்போது அவரது உடலில் ஒரு பாதியாக சேர்ந்தே இருக்கும் தேவியான அவள், தன்னுடைய கணவரை கணங்கும் பக்தர்களுக்கு கருணை சுரக்க ஓடி வந்து முன்னின்று காப்பவள். மழையை பொலியும் மேகங்களை போல் கருணை மழை பொழிபவள். அவளின் கருணையை போல் மழையே நீயும் விடாமல் பொழிய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?
நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!
{{comments.comment}}