- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 16 திருவெம்பாவை பாசுரம் 16 - முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
திருவெம்பாவை 16 :
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
பொருள் :
கடல் நீர் முழுவதையும் முன்பே குடித்து விட்டு, மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதி தேவியைப் போல் கருத்து இருக்கின்றன. அவளின் சிற்றிடை போல் மின்னல்கள் தெறித்து ஓடுகின்றன. அவளின் திருவடியில் இருக்கும் சிலம்புகள் சினுங்குவதை போல் ஒலி எழுப்பு இடி முழங்குகிறது. அவளது நெளிந்த புருவங்களைப் போல் வானவில் காட்சி தருகிறது. வள்ளலை போல் அடியார்களுக்கு வேண்டிய அனைத்தையம் தரும் சிவ பெருமானை பிரியாமல் எப்போது அவரது உடலில் ஒரு பாதியாக சேர்ந்தே இருக்கும் தேவியான அவள், தன்னுடைய கணவரை கணங்கும் பக்தர்களுக்கு கருணை சுரக்க ஓடி வந்து முன்னின்று காப்பவள். மழையை பொலியும் மேகங்களை போல் கருணை மழை பொழிபவள். அவளின் கருணையை போல் மழையே நீயும் விடாமல் பொழிய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் கற்க வேண்டியது நிறைய உள்ளது.. இன்னும் மேம்பட்டால்தான் நல்லது.. இல்லாவிட்டால் கஷ்டம்!
TVK Vijay.. விஜய்யின் மக்கள் சந்திப்பு.. 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு.. தவெக அறிவிப்பு
திமுகவுக்கு அரசியல் தெரியும்.. விஜய்யும் இனிமேல் புரிந்து கொள்வார்.. எஸ்.வி.சேகர்
பீகார் சட்டசபைத் தேர்தல்.. வாக்களிக்கத் தயாராகும் 7.4 கோடி வாக்காளர்கள்.. இறுதிப் பட்டியல் வெளியீடு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 01, 2025... இன்று இவர்களின் வாழ்க்கையே மாறும்
35 வயதுப் பெண்ணை மணந்த 75 வயது தாத்தா.. முதலிரவு முடிந்த மறு நாள் நடந்த விபரீதம்!
கரூரில் விஜய் பேரணியின் போது நடந்தது இதுதான்.. வீடியோ போட்டு விளக்கிக் கூறிய அமுதா ஐஏஎஸ்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் இன்று முதல் அக்., 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
{{comments.comment}}