மார்கழி 16 திருவெம்பாவை பாசுரம் 16 - முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்

Dec 30, 2024,04:58 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 16 திருவெம்பாவை பாசுரம் 16 - முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்


திருவெம்பாவை 16 :


முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு

முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.




பொருள் :


கடல் நீர் முழுவதையும் முன்பே குடித்து விட்டு, மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதி தேவியைப் போல் கருத்து இருக்கின்றன. அவளின் சிற்றிடை போல் மின்னல்கள் தெறித்து ஓடுகின்றன. அவளின் திருவடியில் இருக்கும் சிலம்புகள் சினுங்குவதை போல் ஒலி எழுப்பு இடி முழங்குகிறது. அவளது நெளிந்த புருவங்களைப் போல் வானவில் காட்சி தருகிறது. வள்ளலை போல் அடியார்களுக்கு வேண்டிய அனைத்தையம் தரும் சிவ பெருமானை பிரியாமல் எப்போது அவரது உடலில் ஒரு பாதியாக சேர்ந்தே இருக்கும் தேவியான அவள், தன்னுடைய கணவரை கணங்கும் பக்தர்களுக்கு கருணை சுரக்க ஓடி வந்து முன்னின்று காப்பவள். மழையை பொலியும் மேகங்களை போல் கருணை மழை பொழிபவள். அவளின் கருணையை போல் மழையே நீயும் விடாமல் பொழிய வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்