மார்கழி 20 திருவெம்பாவை பாசுரம் 20 - போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

Jan 03, 2025,04:42 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 20 திருவெம்பாவை பாசுரம் 20 - போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் 


திருவெம்பாவை பாசுரம் 20 :


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் 

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்




பொருள் :


அனைத்திற்கும் முதலுமாக திகழ்பவனே உன்னுடைய மலர் போன்ற பாதங்களை வணங்குகிறோம். அனைத்திற்கும் முடிவாகவும் இருக்கும் உன்னுடைய சிவந்த மொட்டுக்கள் போன்ற பாதங்களை வணங்குகிறோம். அனைத்து உயிர்களும் உருவாக காரணமாக இருக்கும் தங்கத்தை போன்றும் மின்னும் பாதங்களை சரணடைகிறோம். அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் வழங்கி அருளும் உன்னுடைய திருவடியை வணங்குறோம். உயிர்களுக்கு இறுதி காலத்தை தருகின்ற இணையற்ற பாதங்களை வணங்குகிறோம். திருமாலும், பிரம்மாவும் காண முடியாத தாமரை போன்ற பாத தரிசனத்தை எங்களுக்கு காட்டி அருளிய புகழை போற்றி பாடி வணங்குகிறோம். இதே போன்று எப்போதும் உன்னுடைய நினைவில் மூழ்கி மார்கழி நீராடி, உன்னை போற்றி பாடிட எங்களுக்கு அருளிட வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்