- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 20 திருவெம்பாவை பாசுரம் 20 - போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
திருவெம்பாவை பாசுரம் 20 :
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்

பொருள் :
அனைத்திற்கும் முதலுமாக திகழ்பவனே உன்னுடைய மலர் போன்ற பாதங்களை வணங்குகிறோம். அனைத்திற்கும் முடிவாகவும் இருக்கும் உன்னுடைய சிவந்த மொட்டுக்கள் போன்ற பாதங்களை வணங்குகிறோம். அனைத்து உயிர்களும் உருவாக காரணமாக இருக்கும் தங்கத்தை போன்றும் மின்னும் பாதங்களை சரணடைகிறோம். அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் வழங்கி அருளும் உன்னுடைய திருவடியை வணங்குறோம். உயிர்களுக்கு இறுதி காலத்தை தருகின்ற இணையற்ற பாதங்களை வணங்குகிறோம். திருமாலும், பிரம்மாவும் காண முடியாத தாமரை போன்ற பாத தரிசனத்தை எங்களுக்கு காட்டி அருளிய புகழை போற்றி பாடி வணங்குகிறோம். இதே போன்று எப்போதும் உன்னுடைய நினைவில் மூழ்கி மார்கழி நீராடி, உன்னை போற்றி பாடிட எங்களுக்கு அருளிட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சூழல்கள் நம்மை சரி செய்யும்.. எதிர்பாராத தருணத்தில்.. THE MORE I LEARN!
அந்தப் பக்கம் போகாதீங்க.. AM I SCARED"?
மெல்ல தடதடக்கும் மனிதநேயத்தின் இதயத் துடிப்பு.. Humanity!
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
ஒவ்வொரு துணியும்.. ஒவ்வொரு மாணவ மணியாய்.. !
பனி படர்ந்த தாடியுடன் ஒரு முதுபெரும் ஞானி.. Santa's Celestial Chariot: A Yuletide Overture!
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
யோகிகளின் வாழ்க்கை தத்துவம் (Jesus Consciousness)
{{comments.comment}}