- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 20 திருவெம்பாவை பாசுரம் 20 - போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
திருவெம்பாவை பாசுரம் 20 :
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்

பொருள் :
அனைத்திற்கும் முதலுமாக திகழ்பவனே உன்னுடைய மலர் போன்ற பாதங்களை வணங்குகிறோம். அனைத்திற்கும் முடிவாகவும் இருக்கும் உன்னுடைய சிவந்த மொட்டுக்கள் போன்ற பாதங்களை வணங்குகிறோம். அனைத்து உயிர்களும் உருவாக காரணமாக இருக்கும் தங்கத்தை போன்றும் மின்னும் பாதங்களை சரணடைகிறோம். அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் வழங்கி அருளும் உன்னுடைய திருவடியை வணங்குறோம். உயிர்களுக்கு இறுதி காலத்தை தருகின்ற இணையற்ற பாதங்களை வணங்குகிறோம். திருமாலும், பிரம்மாவும் காண முடியாத தாமரை போன்ற பாத தரிசனத்தை எங்களுக்கு காட்டி அருளிய புகழை போற்றி பாடி வணங்குகிறோம். இதே போன்று எப்போதும் உன்னுடைய நினைவில் மூழ்கி மார்கழி நீராடி, உன்னை போற்றி பாடிட எங்களுக்கு அருளிட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}