- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 20 திருவெம்பாவை பாசுரம் 20 - போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
திருவெம்பாவை பாசுரம் 20 :
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்

பொருள் :
அனைத்திற்கும் முதலுமாக திகழ்பவனே உன்னுடைய மலர் போன்ற பாதங்களை வணங்குகிறோம். அனைத்திற்கும் முடிவாகவும் இருக்கும் உன்னுடைய சிவந்த மொட்டுக்கள் போன்ற பாதங்களை வணங்குகிறோம். அனைத்து உயிர்களும் உருவாக காரணமாக இருக்கும் தங்கத்தை போன்றும் மின்னும் பாதங்களை சரணடைகிறோம். அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் வழங்கி அருளும் உன்னுடைய திருவடியை வணங்குறோம். உயிர்களுக்கு இறுதி காலத்தை தருகின்ற இணையற்ற பாதங்களை வணங்குகிறோம். திருமாலும், பிரம்மாவும் காண முடியாத தாமரை போன்ற பாத தரிசனத்தை எங்களுக்கு காட்டி அருளிய புகழை போற்றி பாடி வணங்குகிறோம். இதே போன்று எப்போதும் உன்னுடைய நினைவில் மூழ்கி மார்கழி நீராடி, உன்னை போற்றி பாடிட எங்களுக்கு அருளிட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சுவையான மோர்க்குழம்பு.. வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. மறக்கவே மாட்டீங்க!
மாதவிடாய் வலியா.. இடுப்பு வலியா.. இருக்கவே இருக்கு பாரம்பரிய வைத்தியம்!
நன்றியுணர்வு மலரட்டும்.. Gratitude in Bloom: Don't Take Your Parents for Granted
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம்.. புதிய தாக்குதலில் இறங்கிய ரஷ்ய ராணுவம்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
ராத்திரி 11 மணியானா போதும்.. இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்வது இதைத்தானாம்!
பிரம்மாண்ட ப்ளூபேர்டை லாவகமாக கொண்டு சென்ற பாகுபலி!
வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}