- தாமஸ்
தவறுகளை தவறு என்று உலகிற்கு அடையாளப்படுத்த முனைப்புக் காட்டும் நாம் அத்தவறுகளே நிகழாமல் இருக்க முயல்வது தான் நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமையும்.
ஒரு தவறை தவறு என்று அடையாளப்படுத்துவதற்கு முன் அதை அடையாளப்படுத்தும் தகுதி நமக்கு இருக்கிறதா என்று ஒருகணம் யோசித்தால் தான் தவறைக் கூட தன்மையாய் வெளிப்படுத்துவோம்.
பிறரிடம் மதிப்பை எதிர்பார்க்கும் நாம் அதை அவர்களுக்கு மட்டும் ஏனோ கொடுக்க மறந்து விடுகிறோம். விதைத்தால் தானே அறுக்க முடியும்.

தன் மதிப்பு என்பது தான் வகிக்கும் பதவியைப் பொறுத்தது அல்ல.மாறாக நாம் பிறரிடம் எத்தகைய பண்புகளை விதைக்கிறோம் என்பதைப் பொறுத்ததே.
தன் மதிப்பை அறியாதவர்களே சிரித்தால் கூட தன் மதிப்பு சிதைந்து விடும் என்று கருதி போலியான கோபத்தால் தன்னை அடையாளப்படுத்தி உதவி வேண்டும் போது கூட உறவற்று நிற்கிறார்கள்.
அரவணைப்பது அரசன் என்பதாலேயே குதிரை கூட அரியணை கேட்கிறது. எனவே தகுதியானதை தகுதியான இடத்தில் வைப்போம். அழகாய் இருக்கிறது என்பதற்காக காலணிகளை கழுத்தில் அணிய முடியாது தானே.
மதிப்பு என்பது வெளியில் இருந்து கிடைப்பதல்ல நிச்சயமாக நம்மில் இருந்து உதிப்பது. ஒவ்வொரு பொருளும் அதனதன் இடத்தை சேரும்பொழுதே தன் மதிப்பைப் பெறுகிறது. எனவே நம்மை மதிக்காதவர்கள் எல்லாம் நம் மதிப்பு தெரியாதவர்கள் அல்ல பிறரை மதிக்கவே தெரியாதவர்கள். எனவே நம்மை மதிக்காதவர்களையும் மதிப்போம் மதிப்பின் அவசியம் விதைப்போம்.
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}