- இரா. மும்தாஜ் பேகம்
பெரியவர்களுக்கு எழுவதுவதை விட சிறியவர்களுக்கு அதாவது சிறார்களுக்கு எழுதுவது சாலச் சிறந்தது என்று சொல்வார்கள். காரணம், குழந்தைகளிடம் கற்றுக் கொள்ளும் திறன், கிரகிக்கும் திறன், உள்வாங்கும் திறன் அதிகமாக இருக்கும்.
அதனால்தான் சிலர் குழந்தைகளுக்காக எழுதுவதை அதிகம் விரும்புவார்கள். அது கவிதையாக இருந்தாலும் சரி, பாடலாக இருந்தாலும் சரி, கட்டுரையாக இருந்தாலும் சரி, ஈஸியாக அது போய்ச் சேர்ந்து விடும். சினிமாப் பாடல்களைக் கூடப் பாருங்கள்.. ரைம்ஸ் பாணியில் எழுதும் பாடல்தான் சூப்பர் ஹிட் ஆகிறது. காரணம் இதுதான்.
சரி அதை விடுங்க.. வாங்க நம்ம தொந்தி மாமாவைப் பார்ப்போம்.. !

தொந்தி மாமா வந்தாராம்.
தொப்பிய தலையில் போட்டாராம்.
சாக்கு பையை எடுத்தாராம்.
சறுக்கி கீழே விழுந்தாராம்.
அ.. ஆ என்று அலறியே அவரும் வலியால் துடித்தாராம்.
அருகிலிருந்தோர் பார்த்ததுமே இ.... ஈ.என்றே சிரித்தனராம்.
உ,ஊ என்று கூறியே
உடனே எழுந்து நின்றாராம்.
சீனி மிட்டாய் எடுத்தாராம்.
சிரித்தோர்க்கெல்லாம் கொடுத்தாராம்.
ஈ....ஈ என்றே சிரித்தவர்கள்.
ஒ... ஓ என்றே வியந்தனராம்.
ஐ...ஐ என்று கூறியுமே ஆடிப்பாடி மகிழ்ந்தாராம்.
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)
Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
{{comments.comment}}