- இரா. மும்தாஜ் பேகம்
பெரியவர்களுக்கு எழுவதுவதை விட சிறியவர்களுக்கு அதாவது சிறார்களுக்கு எழுதுவது சாலச் சிறந்தது என்று சொல்வார்கள். காரணம், குழந்தைகளிடம் கற்றுக் கொள்ளும் திறன், கிரகிக்கும் திறன், உள்வாங்கும் திறன் அதிகமாக இருக்கும்.
அதனால்தான் சிலர் குழந்தைகளுக்காக எழுதுவதை அதிகம் விரும்புவார்கள். அது கவிதையாக இருந்தாலும் சரி, பாடலாக இருந்தாலும் சரி, கட்டுரையாக இருந்தாலும் சரி, ஈஸியாக அது போய்ச் சேர்ந்து விடும். சினிமாப் பாடல்களைக் கூடப் பாருங்கள்.. ரைம்ஸ் பாணியில் எழுதும் பாடல்தான் சூப்பர் ஹிட் ஆகிறது. காரணம் இதுதான்.
சரி அதை விடுங்க.. வாங்க நம்ம தொந்தி மாமாவைப் பார்ப்போம்.. !

தொந்தி மாமா வந்தாராம்.
தொப்பிய தலையில் போட்டாராம்.
சாக்கு பையை எடுத்தாராம்.
சறுக்கி கீழே விழுந்தாராம்.
அ.. ஆ என்று அலறியே அவரும் வலியால் துடித்தாராம்.
அருகிலிருந்தோர் பார்த்ததுமே இ.... ஈ.என்றே சிரித்தனராம்.
உ,ஊ என்று கூறியே
உடனே எழுந்து நின்றாராம்.
சீனி மிட்டாய் எடுத்தாராம்.
சிரித்தோர்க்கெல்லாம் கொடுத்தாராம்.
ஈ....ஈ என்றே சிரித்தவர்கள்.
ஒ... ஓ என்றே வியந்தனராம்.
ஐ...ஐ என்று கூறியுமே ஆடிப்பாடி மகிழ்ந்தாராம்.
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
இட்லி மாதிரி.. குழியில் விழுந்தாலும் கும்முன்னு எழுந்து வரணும்!
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு
காகங்களில் H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி...தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழை உலகளாவிய அளவுக்கு வளர்த்த மாபெரும் அறிஞர்!
ஒன்றாய் நிற்கும் ஒளி!
{{comments.comment}}