தூர்ந்து போன குளம்!

Aug 18, 2026,12:18 PM IST

- கவி.கலை


வழிப்போக்கனுக்கும்  

வாயில்லா உயிருக்கும் 

வயிராற உணவிட 

வலுவாய் உழைத்தவள் நான், 

 

வாய்க்கால் வழி பாய்ந்து 

வயலின் தாகம் தீர்க்க 

வழிவகை செய்தவள்  நான், 

 

கிராமத்தின் நடுவே 

நிலையாக நின்று  

திருவிழா பார்ப்பவள் நான் 

 

பசுமை எங்கும் பரப்பி 

பார்வைக்கு விருந்திட 

பாடுபட்டவள் நான், 


 


இன்றோ, 

வறட்சியால் அல்ல 

வக்கிரம் கொண்ட 

மானுடன் அலட்சியத்தால் 

வீழ்ந்தவள் நான். 

 

தூர்வாராமல், 

தூக்கி எறியப்பட்ட 

தூர்ந்து போன குளம் நான்


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்