சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர் விடுமுறை வருவதால், சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்கிறார்கள். இதனால், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.
கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது.

தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, விஜயதசமி ஆகியவை திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வருகிறது. இன்று ஒரு நாள் லீவு எடுத்தால் நான்கு நாட்கள் சுளையாக லீவு கிடைக்கும். இந்த தொடர் விடுமுறையின் காரணமாக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
நேற்றிலிருந்தே பலரும் கிளம்பத் தொடங்கி விட்டனர். அரசு அறிவித்துள்ள சிறப்புப் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பகல் நேரங்களில் அனைத்து ரயில் நிலையங்களும் கூட்டத்தால் நிரம்பிக் காணப்படுகின்றன. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னையின் முக்கிய பகுதியான தாம்பரம், கோயம்பேடு, பெருங்களத்தூர், போன்ற பேருந்து நிலையங்களில் அளவுக்கு அதிகமான மக்கள் வருகையால் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக தென் மாவட்டங்களுக்குத்தான் அதிக அளவிலான மக்கள் செல்வார்கள். அதேபோல விமானங்களில் செல்லவும் மக்கள் இப்போது ஆர்வம் காட்டுவதால் விமான நிலையத்திலும் வழக்கமானதை விட கூட்டம் அதிகமாகவே உள்ளது.
தொடர் விடுமுறையால் கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்
முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் களம் காண்கிறாரா?
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு!
தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்
இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?
தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!
{{comments.comment}}