விட்டாச்சு லீவு.. சென்னையிலிருந்து அலைகடலென.. படையெடுக்கும் மக்கள் கூட்டம்.. பஸ், ரயில்களில்!

Oct 21, 2023,11:36 AM IST

சென்னை:  ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர் விடுமுறை வருவதால், சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்கிறார்கள். இதனால், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. 


கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. 




தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, விஜயதசமி ஆகியவை திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வருகிறது. இன்று ஒரு நாள் லீவு எடுத்தால் நான்கு நாட்கள் சுளையாக லீவு கிடைக்கும். இந்த தொடர் விடுமுறையின் காரணமாக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.


நேற்றிலிருந்தே பலரும் கிளம்பத் தொடங்கி விட்டனர். அரசு அறிவித்துள்ள சிறப்புப் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பகல் நேரங்களில் அனைத்து ரயில் நிலையங்களும் கூட்டத்தால் நிரம்பிக் காணப்படுகின்றன. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 




சென்னையின் முக்கிய பகுதியான தாம்பரம், கோயம்பேடு, பெருங்களத்தூர், போன்ற பேருந்து நிலையங்களில் அளவுக்கு அதிகமான மக்கள் வருகையால்  பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக தென் மாவட்டங்களுக்குத்தான் அதிக அளவிலான மக்கள் செல்வார்கள். அதேபோல விமானங்களில் செல்லவும் மக்கள் இப்போது ஆர்வம் காட்டுவதால் விமான நிலையத்திலும் வழக்கமானதை விட கூட்டம் அதிகமாகவே உள்ளது.


தொடர் விடுமுறையால் கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.


சமீபத்திய செய்திகள்

news

விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி : முதல்வர் விஜய் அறிவிப்பு

news

அமைச்சர் பேசியதற்காக சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்

news

பாஜக தேசிய நிர்வாகிகள் மாற்றம்: 65 பேருக்கு புதிய பொறுப்புகள் அறிவிப்பு

news

சில்லெனக் குளிர வைக்கும் அன்பு மழலை எச்சில் முத்தம்...!

news

கரந்தை தமிழ்ச்சங்கத்தின் உலகத் தமிழ் செம்மொழி சைவ மாநாடு.. 2027 ஏப்ரல் 14ல் தொடக்கம்

news

வழிமேல் விழி வைத்து வரப்போரம் காத்திருப்பேன்

news

ஏகாதசி விரதத்தை விட கோடி மடங்கு பலன் தரும் அபூர்வ காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம்!

news

Monday Motivation: அலட்சியம் தவிர்ப்போம்!! ஆனந்தமாய் வாழ்வோம்!!

news

Travel story: ஏழு வருடங்கள் போதாது.. அந்த 7 நாள் அனுபவத்தைச் சொல்ல.. ஒரு மினி தொடர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்