சென்னை: பக்கத்து வீட்டு பெண்ணை அவதூறாக பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார் எழுந்துள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த நாயகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். இவர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டவர். திருமணத்திற்குப் பிறகும் இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

சிறிய ரோலாக இருந்தாலும் இவருடைய நடிப்பின் திறமையால் பிரபலமாக பேசப்படுபவர். ராம் திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அம்மா கேரக்டர்களில் அசத்திக் கொண்டிருக்கும் சரண்யா பொன்வண்ணன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டுப்பெண் ஸ்ரீதேவி. இவர் தனது வீட்டின் முன் பக்கத்தில் உள்ள 20 அடி கேட்டை திறக்கும் போது சரண்யா பொன்வண்ணனின் காரின் அருகே மோதுவது போல சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. சரண்யா கோபமடைந்து தெருவுக்கே வந்து விட்டார். ஸ்ரீதேவியின் வீட்டிற்கு முன்பு வந்து ஆவேசமாக சண்டை போட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தன்னை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி கொடுத்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
{{comments.comment}}