சென்னை: பக்கத்து வீட்டு பெண்ணை அவதூறாக பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார் எழுந்துள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த நாயகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். இவர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டவர். திருமணத்திற்குப் பிறகும் இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

சிறிய ரோலாக இருந்தாலும் இவருடைய நடிப்பின் திறமையால் பிரபலமாக பேசப்படுபவர். ராம் திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அம்மா கேரக்டர்களில் அசத்திக் கொண்டிருக்கும் சரண்யா பொன்வண்ணன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டுப்பெண் ஸ்ரீதேவி. இவர் தனது வீட்டின் முன் பக்கத்தில் உள்ள 20 அடி கேட்டை திறக்கும் போது சரண்யா பொன்வண்ணனின் காரின் அருகே மோதுவது போல சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. சரண்யா கோபமடைந்து தெருவுக்கே வந்து விட்டார். ஸ்ரீதேவியின் வீட்டிற்கு முன்பு வந்து ஆவேசமாக சண்டை போட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தன்னை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி கொடுத்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}