- ரா. பிரேமா கண்ணன்
தூத்துக்குடி: துளசி பூஜை என்பது இந்து மரபில் மிகவும் புனிதமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விழாவாகும். துளசி செடி துளசி மாதா என்று கருதப்படுகிறது .
வீட்டில் வளம், ஆரோக்கியம், அமைதி, செழிப்பு ஆகியவற்றை வழங்கும் புனித செடியாக போற்றப்படுகிறது .கார்த்திகை மாதத்தில் துளசி பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. துளசி செடியை தூய்மையாக்கி மண்ணை அலங்கரித்து விலங்குகள் ஏற்றி பூஜை செய்யப்படுகிறது.
வீட்டில் பெண்கள் துளசி செடிக்கு, மஞ்சள், குங்குமம் , சந்தனம் மற்றும் மலர் மலர்களால் அலங்காரம் செய்கிறார்கள். குடும்ப நலன், ஆரோக்கியம், நல்லிணக்கம் வேண்டப்படுகிறது.துளசி செடியை சுற்றி தீபம் ஏற்றுவது வீட்டில் உள்ள நெகட்டிவ் சக்திகளை நீக்கி நல்ல சக்திகளை வரவை வரவேற்கும் என்று நம்பப்படுகிறது. துளசி பூஜை விஷ்ணு பெருமானுக்கு மிகவும் பிரியமானதாக கருதப்படுகிறது . இது நேர்மறை ஆற்றலை கொண்டுவரும் .

ஸ்ரீ பிருந்தா சேவா டிரஸ்ட் ஸ்ரீ பிருந்தா கோசாலை மற்றும் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் பஜனை குழு சார்பாக, துளசியின் மகத்துவத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு 504 துளசி வழிபாடு 26.11.2025 புதன்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் கல்லூரி கலையரங்கத்தில் வைத்து மாலை 5:30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ளதால் பக்தர்கள் அனைவரும் துளசி பூஜை விழாவில் கலந்து கொண்டு துளசி மாதாவின் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}