- ரா. பிரேமா கண்ணன்
தூத்துக்குடி: துளசி பூஜை என்பது இந்து மரபில் மிகவும் புனிதமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விழாவாகும். துளசி செடி துளசி மாதா என்று கருதப்படுகிறது .
வீட்டில் வளம், ஆரோக்கியம், அமைதி, செழிப்பு ஆகியவற்றை வழங்கும் புனித செடியாக போற்றப்படுகிறது .கார்த்திகை மாதத்தில் துளசி பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. துளசி செடியை தூய்மையாக்கி மண்ணை அலங்கரித்து விலங்குகள் ஏற்றி பூஜை செய்யப்படுகிறது.
வீட்டில் பெண்கள் துளசி செடிக்கு, மஞ்சள், குங்குமம் , சந்தனம் மற்றும் மலர் மலர்களால் அலங்காரம் செய்கிறார்கள். குடும்ப நலன், ஆரோக்கியம், நல்லிணக்கம் வேண்டப்படுகிறது.துளசி செடியை சுற்றி தீபம் ஏற்றுவது வீட்டில் உள்ள நெகட்டிவ் சக்திகளை நீக்கி நல்ல சக்திகளை வரவை வரவேற்கும் என்று நம்பப்படுகிறது. துளசி பூஜை விஷ்ணு பெருமானுக்கு மிகவும் பிரியமானதாக கருதப்படுகிறது . இது நேர்மறை ஆற்றலை கொண்டுவரும் .

ஸ்ரீ பிருந்தா சேவா டிரஸ்ட் ஸ்ரீ பிருந்தா கோசாலை மற்றும் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் பஜனை குழு சார்பாக, துளசியின் மகத்துவத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு 504 துளசி வழிபாடு 26.11.2025 புதன்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் கல்லூரி கலையரங்கத்தில் வைத்து மாலை 5:30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ளதால் பக்தர்கள் அனைவரும் துளசி பூஜை விழாவில் கலந்து கொண்டு துளசி மாதாவின் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}