ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!

Nov 28, 2025,01:09 PM IST

- அ. கோகிலா தேவி


ஓசூர்: தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் உள்ள ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கான டெண்டரை தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோ விடுத்துள்ளது. 


தமிழ்நாடு அரசு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் ஒரு புதிய பசுமை விமான நிலையத்தை அமைக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளது. இதற்காக, TIDCO (தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்) ஒரு புதிய டெண்டரை (ஒப்பந்தப்புள்ளி) வெளியிட்டுள்ளது.




ஓசூர் ஒரு முக்கியமான தொழில் மற்றும் உற்பத்தி நகரமாக உள்ளது. தமிழ்நாட்டின் அதி முக்கியமான தொழில் கேந்திரமாக ஓசூர் விரிவடைந்து வருகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன. கிட்டத்தட்ட குட்டி பெங்களூருவாக பார்க்கப்படுகிறது ஓசூர். பெங்களூரு நகரிலிருந்து வெறும் 40 கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ளது. 


இந்தியாவின் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள விமான நிலையங்களில் ஒன்றான பெங்களூருவின் கெம்பேகவுடா பன்னாட்டு விமான நிலையம் நகரின் வடக்கு திசையில் இருக்கிறது. ஓசூர் விமான நிலையம் செயல்படத் துவங்கினால், தென் இந்தியப் பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்தின் ஒரு பகுதியை இது கையாளும். இதனால் பெங்களூரு விமான நிலையத்தின் பணிச்சுமை குறையும்.


TIDCO-வின் டெண்டர் பணிகள் முடிந்து, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், ஓசூர் விமான நிலையம் தென் தமிழகத்திற்கான மற்றொரு முக்கிய நுழைவு வாயிலாக உயரும். இதன் மூலம் ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்ல இது பெரிதும் உதவும்.


அதேசமயம், மறுபக்கம் ஓசூர் விமான நிலையம் வந்து விடாமல் தடுக்க கர்நாடகத் தரப்பிலும் தீவிரமாக உள்ளதாக தெரிகிறது. காரணம், ஓசூர் விமான நிலையம் வந்தால் பெங்களூரு விமான நிலையத்தில் போக்குவரத்து வெகுவாக குறையும் என்ற அச்சம் அங்கு உள்ளது. ஏற்கனவே புதிய விமான நிலையம் கட்ட கர்நாடக அரசு தெற்கு பெங்களூரு பகுதியில் இடம் பார்த்து வருகிறது. ஆனால் ஓசூர் விமான நிலையம்  வந்து விட்டால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடியும் என்ற குழப்பமும் அங்கு உள்ளது.


இதற்கிடையே தமிழ்நாடு அரசு பல்வேறு தடைகளையும் தகர்த்து ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் தீவிரமாக உள்ளது.


(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' கட்டாயம்.. அரசு உத்தரவு.. மாணவர்கள் ஹேப்பி!

news

இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கு என்ன ஆதாரம்?.. கேட்கிறார் மகன் காசிம் கான்

news

ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!

news

மியாமி ஜி 20 மாநாடு.. தென் ஆப்பிரிக்க அழைக்கப்படாது.. அமெரிக்கா முடிவு!

news

ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!

news

ரூ. 95,000த்திற்கு உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு

news

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியா நீங்க.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

news

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!

news

அந்த மழைத் துளிகளின் சத்தம் முழுவதும்...!

அதிகம் பார்க்கும் செய்திகள்