சென்னை: தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்களுக்கான கட்டண விகிதம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 1997ம் ஆண்டு மறைந்த கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இந்த மினி பஸ். சிற்றுந்து என்ற பெயரிலான இந்த மினி பஸ்களின் சேவை, ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியில் மிகப் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அரசுப் பேருந்துகள் போக முடியாத இடங்களுக்கெல்லாம் மினி பஸ்கள் சென்றதால் மக்களின் போக்குவரத்து இயல்பானது.

அதுவரை ஆட்டோக்களுக்குப் பெரிய தொகையை செலவிட வேண்டி வந்த மக்களுக்கு மினி பஸ்கள் மிகப் பெரிய வரப் பிரசாதமாக அமைந்தன. இந்த மினி பஸ்களைப் பின்பற்றித்தான் சென்னை புறநகர்ப் பகுதிகளில் மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஸ்மால் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த ஸ்மால் பஸ்கள் அரசால் இயக்கப்படுவபை. தற்போது சென்னையிலும் மினி பஸ்களை அறிமுகப்படுத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்களின் டிக்கெட் கட்டண விகிதம் மாற்றப்பட்டுள்ளது. புதிய கட்டண விகிதம் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ. 4 கட்டணமாக இருக்கும். அடுத்த ஸ்டேஜ் வரை இதே கட்டணம்தான். அதாவது முதல் நான்கு கிலோமீட்டர் வரைக்கும் 4 ரூபாய்தான் டிக்கெட் கட்டணமாகும். அதற்கு அடுத்த ஸ்டேஜுக்கு ரூ. 5, 4வது ஸ்டேஜுக்கு ரூ. 6, 5வது ஸ்டேஜுக்கு ரூ. 7, 6வது ஸ்டேஜுக்கு ரூ. 8, 7வது ஸ்டேஜ் 8, மற்றும் 9வது ஸ்டேஜ் வரை ரூ. 9 கட்"ணமாக இருக்கும்.10வது ஸ்டேஜுக்கான கட்டணம் ரூ. 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!
{{comments.comment}}