சென்னை: தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்களுக்கான கட்டண விகிதம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 1997ம் ஆண்டு மறைந்த கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இந்த மினி பஸ். சிற்றுந்து என்ற பெயரிலான இந்த மினி பஸ்களின் சேவை, ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியில் மிகப் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அரசுப் பேருந்துகள் போக முடியாத இடங்களுக்கெல்லாம் மினி பஸ்கள் சென்றதால் மக்களின் போக்குவரத்து இயல்பானது.

அதுவரை ஆட்டோக்களுக்குப் பெரிய தொகையை செலவிட வேண்டி வந்த மக்களுக்கு மினி பஸ்கள் மிகப் பெரிய வரப் பிரசாதமாக அமைந்தன. இந்த மினி பஸ்களைப் பின்பற்றித்தான் சென்னை புறநகர்ப் பகுதிகளில் மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஸ்மால் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த ஸ்மால் பஸ்கள் அரசால் இயக்கப்படுவபை. தற்போது சென்னையிலும் மினி பஸ்களை அறிமுகப்படுத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்களின் டிக்கெட் கட்டண விகிதம் மாற்றப்பட்டுள்ளது. புதிய கட்டண விகிதம் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ. 4 கட்டணமாக இருக்கும். அடுத்த ஸ்டேஜ் வரை இதே கட்டணம்தான். அதாவது முதல் நான்கு கிலோமீட்டர் வரைக்கும் 4 ரூபாய்தான் டிக்கெட் கட்டணமாகும். அதற்கு அடுத்த ஸ்டேஜுக்கு ரூ. 5, 4வது ஸ்டேஜுக்கு ரூ. 6, 5வது ஸ்டேஜுக்கு ரூ. 7, 6வது ஸ்டேஜுக்கு ரூ. 8, 7வது ஸ்டேஜ் 8, மற்றும் 9வது ஸ்டேஜ் வரை ரூ. 9 கட்"ணமாக இருக்கும்.10வது ஸ்டேஜுக்கான கட்டணம் ரூ. 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!
டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!
நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைக்கு பஞ்சமே இல்லை... உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை: அன்புமணி
கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?
சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
{{comments.comment}}