மினி பஸ்களில்.. இனி மினிமம் டிக்கெட் ரூ. 4.. அதிகபட்சம் 10 ரூபாய்.. புதிய கட்டண விகிதம் அறிவிப்பு

Jan 28, 2025,07:25 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்களுக்கான கட்டண விகிதம் மாற்றப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த  1997ம் ஆண்டு மறைந்த கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இந்த மினி பஸ். சிற்றுந்து என்ற பெயரிலான இந்த மினி பஸ்களின் சேவை, ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியில் மிகப் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.  அரசுப் பேருந்துகள் போக முடியாத இடங்களுக்கெல்லாம் மினி பஸ்கள் சென்றதால் மக்களின் போக்குவரத்து இயல்பானது.




அதுவரை ஆட்டோக்களுக்குப் பெரிய தொகையை செலவிட வேண்டி வந்த மக்களுக்கு மினி பஸ்கள் மிகப் பெரிய வரப் பிரசாதமாக அமைந்தன. இந்த மினி பஸ்களைப் பின்பற்றித்தான் சென்னை புறநகர்ப் பகுதிகளில் மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஸ்மால் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த ஸ்மால் பஸ்கள் அரசால் இயக்கப்படுவபை. தற்போது சென்னையிலும் மினி பஸ்களை அறிமுகப்படுத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்களின் டிக்கெட் கட்டண விகிதம் மாற்றப்பட்டுள்ளது. புதிய கட்டண விகிதம் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி முதல் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ. 4 கட்டணமாக இருக்கும். அடுத்த ஸ்டேஜ் வரை இதே கட்டணம்தான். அதாவது முதல் நான்கு கிலோமீட்டர் வரைக்கும் 4 ரூபாய்தான் டிக்கெட் கட்டணமாகும். அதற்கு அடுத்த ஸ்டேஜுக்கு ரூ. 5, 4வது ஸ்டேஜுக்கு ரூ. 6, 5வது ஸ்டேஜுக்கு  ரூ. 7, 6வது ஸ்டேஜுக்கு ரூ. 8, 7வது ஸ்டேஜ் 8, மற்றும் 9வது ஸ்டேஜ் வரை ரூ. 9 கட்"ணமாக இருக்கும்.10வது ஸ்டேஜுக்கான கட்டணம் ரூ. 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்