சென்னை: தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்களுக்கான கட்டண விகிதம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 1997ம் ஆண்டு மறைந்த கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இந்த மினி பஸ். சிற்றுந்து என்ற பெயரிலான இந்த மினி பஸ்களின் சேவை, ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியில் மிகப் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அரசுப் பேருந்துகள் போக முடியாத இடங்களுக்கெல்லாம் மினி பஸ்கள் சென்றதால் மக்களின் போக்குவரத்து இயல்பானது.

அதுவரை ஆட்டோக்களுக்குப் பெரிய தொகையை செலவிட வேண்டி வந்த மக்களுக்கு மினி பஸ்கள் மிகப் பெரிய வரப் பிரசாதமாக அமைந்தன. இந்த மினி பஸ்களைப் பின்பற்றித்தான் சென்னை புறநகர்ப் பகுதிகளில் மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஸ்மால் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த ஸ்மால் பஸ்கள் அரசால் இயக்கப்படுவபை. தற்போது சென்னையிலும் மினி பஸ்களை அறிமுகப்படுத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்களின் டிக்கெட் கட்டண விகிதம் மாற்றப்பட்டுள்ளது. புதிய கட்டண விகிதம் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ. 4 கட்டணமாக இருக்கும். அடுத்த ஸ்டேஜ் வரை இதே கட்டணம்தான். அதாவது முதல் நான்கு கிலோமீட்டர் வரைக்கும் 4 ரூபாய்தான் டிக்கெட் கட்டணமாகும். அதற்கு அடுத்த ஸ்டேஜுக்கு ரூ. 5, 4வது ஸ்டேஜுக்கு ரூ. 6, 5வது ஸ்டேஜுக்கு ரூ. 7, 6வது ஸ்டேஜுக்கு ரூ. 8, 7வது ஸ்டேஜ் 8, மற்றும் 9வது ஸ்டேஜ் வரை ரூ. 9 கட்"ணமாக இருக்கும்.10வது ஸ்டேஜுக்கான கட்டணம் ரூ. 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}