TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களா நீங்கள்.. சூப்பரான குட் நியூஸ் சொன்ன தேர்வாணையம்..!

Nov 09, 2024,01:51 PM IST

சென்னை: குரூப் 2 காலிப் பணியிடங்கள் கூடுதலாக 213 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் போட்டி தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக குரூப் 1, குரூப் 2, 2 ஏ மற்றும் குரூப் 4 என பல்வேறு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படுகிறது.


அதன்படி கடந்த ஆண்டு குரூப் 2 மற்றும் 2 ஏ போட்டித் தேர்வுகள்  செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. இதில்  குரூப் 2 வில் 507 காலிப்பணியிடங்கள், குரூப்-2ஏ வில் 1,820 காலிப்பணியிடங்கள என மொத்தம் 2,327 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது.இதில்  தேர்வாளர்கள்  சுமார் 5.81 லட்சம் பேர் எழுதியிருந்தனர். 




இதற்கிடையே தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து குரூப் 4ல் கூடுதலாக 2,208 காலியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு,  மொத்தம் 8932 ஆக அதிகரிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து தற்போது குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி  வந்த நிலையில், இதனை பரிசீலனை செய்த தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ எழுதிய மாணவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸை கொடுத்துள்ளது.


அதாவது, ஏற்கனவே குரூப் 2 மற்றும் 2 ஏ வில் 2327 ஆக இருந்த காலி பணியிடங்களுக்களில் தற்போது கூடுதலாக 213 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 2540 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்