சென்னை: குரூப் 2 காலிப் பணியிடங்கள் கூடுதலாக 213 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் போட்டி தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக குரூப் 1, குரூப் 2, 2 ஏ மற்றும் குரூப் 4 என பல்வேறு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படுகிறது.
அதன்படி கடந்த ஆண்டு குரூப் 2 மற்றும் 2 ஏ போட்டித் தேர்வுகள் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. இதில் குரூப் 2 வில் 507 காலிப்பணியிடங்கள், குரூப்-2ஏ வில் 1,820 காலிப்பணியிடங்கள என மொத்தம் 2,327 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது.இதில் தேர்வாளர்கள் சுமார் 5.81 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
இதற்கிடையே தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து குரூப் 4ல் கூடுதலாக 2,208 காலியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 8932 ஆக அதிகரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இதனை பரிசீலனை செய்த தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ எழுதிய மாணவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸை கொடுத்துள்ளது.
அதாவது, ஏற்கனவே குரூப் 2 மற்றும் 2 ஏ வில் 2327 ஆக இருந்த காலி பணியிடங்களுக்களில் தற்போது கூடுதலாக 213 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 2540 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}