சென்னை: 3935 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் குரூப் 1,குரூப் 2, குரூப் 4, தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தப் போட்டித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசுத் துறையில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகள் மூலம் அரசு வேலையில் பணிபுரிய வேண்டும் என்பது ஒவ்வொரு இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. இதற்காக பலரும் போட்டா போட்டி கொண்டு படித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.அதே சமயத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமம் இல்லாமல் படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு தேர்வு தேதி தேதியை அறிவித்து வருவதும் வழக்கம்.

அதன்படி இத்தேர்வுகள் குறித்த அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் டிஎன்பிசி நிர்வாகம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, 3,935 காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வுகள் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.
மேலும் குரூப்-4 தேர்வுக்கு இன்று முதல் அடுத்த மாதம், அதாவது மே 24ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக குரூப் 4 தேர்வுகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}