Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Apr 25, 2025,04:56 PM IST

சென்னை: 3935 பணியிடங்களை நிரப்புவதற்காக  குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)  அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் குரூப் 1,குரூப் 2, குரூப் 4, தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தப் போட்டித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசுத் துறையில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகள் மூலம் அரசு வேலையில் பணிபுரிய வேண்டும் என்பது ஒவ்வொரு இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. இதற்காக பலரும் போட்டா போட்டி கொண்டு படித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.அதே சமயத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமம் இல்லாமல் படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு தேர்வு தேதி தேதியை அறிவித்து வருவதும் வழக்கம். 




அதன்படி இத்தேர்வுகள் குறித்த அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் டிஎன்பிசி நிர்வாகம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  இன்று வெளியிட்டுள்ளது.


அதன்படி, 3,935 காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வுகள் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்மாக  அறிவித்துள்ளது. 


மேலும் குரூப்-4 தேர்வுக்கு இன்று முதல் அடுத்த மாதம், அதாவது மே 24ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக குரூப் 4 தேர்வுகள்  தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!

news

அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு

news

ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!

news

ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி

news

உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு

news

ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?

news

தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?

news

ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்