சென்னை: டி என் பி எஸ் சி குரூப் 1 முதன்மைத் தேர்வு ரிசல்ட்டை இன்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இண்டர்வியூ நடைபெறும் எனவும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
டி என் பி எஸ் சி நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் உள்ள காலி பணியிடங்களுக்கான குரூப் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டு தேர்வாணையம் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் முதலிய பணிகளுக்காக ஆண்டுதோறும் குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குரூப் 1 முதன்மை தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்கள் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்காக கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 முதல் 13ஆம் தேதி வரை எழுத்து தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் குரூப் 1 முதன்மைத் தேர்வு எழுதி இருந்தனர். இந்த குரூப்1 முதன்மை தேர்வுக்கான முடிவை இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இன்டர்வியூ நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}