சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9 தேதி நடைபெறும் எனவும், இந்தத் தேர்வுக்காக விண்ணப்பிக்க வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி தேதி எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசுத் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை தரக்கூடிய வகையில் குரூப் 4 தேர்வுகள் இருப்பதாலும், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை போதுமானதாக இருப்பதாலும், பல லட்சம் பேர் தகுதி உடையவர்களாக இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளை பலரும் எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கான அறிவிப்பை தற்போது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில்
வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், உட்பட 6,244 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி காலை 9:30 மணி முதல் நண்பகல் 12. 30 மணி வரை நடைபெறும். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி தேதி. குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பங்களை திருத்துவதற்கு மார்ச் 4 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை என மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள தாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}