சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9 தேதி நடைபெறும் எனவும், இந்தத் தேர்வுக்காக விண்ணப்பிக்க வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி தேதி எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசுத் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை தரக்கூடிய வகையில் குரூப் 4 தேர்வுகள் இருப்பதாலும், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை போதுமானதாக இருப்பதாலும், பல லட்சம் பேர் தகுதி உடையவர்களாக இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளை பலரும் எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கான அறிவிப்பை தற்போது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில்
வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், உட்பட 6,244 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி காலை 9:30 மணி முதல் நண்பகல் 12. 30 மணி வரை நடைபெறும். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி தேதி. குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பங்களை திருத்துவதற்கு மார்ச் 4 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை என மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள தாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
{{comments.comment}}