சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9 தேதி நடைபெறும் எனவும், இந்தத் தேர்வுக்காக விண்ணப்பிக்க வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி தேதி எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசுத் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை தரக்கூடிய வகையில் குரூப் 4 தேர்வுகள் இருப்பதாலும், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை போதுமானதாக இருப்பதாலும், பல லட்சம் பேர் தகுதி உடையவர்களாக இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளை பலரும் எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கான அறிவிப்பை தற்போது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில்
வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், உட்பட 6,244 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி காலை 9:30 மணி முதல் நண்பகல் 12. 30 மணி வரை நடைபெறும். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி தேதி. குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பங்களை திருத்துவதற்கு மார்ச் 4 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை என மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள தாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}