சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9 தேதி நடைபெறும் எனவும், இந்தத் தேர்வுக்காக விண்ணப்பிக்க வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி தேதி எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசுத் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை தரக்கூடிய வகையில் குரூப் 4 தேர்வுகள் இருப்பதாலும், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை போதுமானதாக இருப்பதாலும், பல லட்சம் பேர் தகுதி உடையவர்களாக இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளை பலரும் எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கான அறிவிப்பை தற்போது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில்
வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், உட்பட 6,244 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி காலை 9:30 மணி முதல் நண்பகல் 12. 30 மணி வரை நடைபெறும். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி தேதி. குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பங்களை திருத்துவதற்கு மார்ச் 4 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை என மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள தாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}