கோவையில் இன்று தேர்தல் சுற்று பயணம் துவங்கினார் எடப்பாடி பழனிச்சாமி

Jul 07, 2025,10:39 AM IST

கோவை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை துவக்குகிறார்கள். இந்த பயணம் வெற்றி அடைய கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை முதல் ஆளாக துவக்கி உள்ளது அதிமுக. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பாஜக உடன் கூட்டணியை பேசி, அதிகாாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே போல் தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு அதிமுக சார்பில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக பிரச்சார பயணத்தையும் துவக்க உள்ளார்கள்.




ஏற்கனவே 2 நாட்களுக்கு முன் அதிமுக தனது பிரச்சார பாடலையும், லோகோவையும் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூலை 07ம் தேதியான இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்க உள்ளார். ஜூலை 23ம் தேதி தனது முதல் கட்ட பிரச்சார சுற்றுப் பயணத்தை தஞ்சாவூரில் நிறைவு செய்ய உள்ளதாகவும் அதிமுக சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 


எடப்பாடி பழனிச்சாமி தனது தமிழக பிரச்சார சுற்றுப் பயணத்தில் திமுக கூட்டணிக்கு எதிராக வலுவான பிரச்சாரத்தை முன் வைப்பார் என சொல்லப்படுகிறது. மக்களிடம் நிலவும் அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலையை ஓட்டுக்களாக மாற்றுவதற்காக தான், தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே அதிமுக இந்த பிரச்சார பயணத்தை துவக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சுற்றுப் பயணத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்