சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்த்தபோதுஉங்களுக்காக.
வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த கனமழையினால் காய்கறிகளின் வரத்து தற்போது குறைந்து வருகிறது. இருப்பினும் சென்னை கோயம்பேடு சந்தையில் பூண்டின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முதல்தர பூண்டின் விலை, மொத்த விலையில், ரூ.340க்கும், சில்லரையில் ரூ.380க்கும் விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து காய்களின் விலை ஏறியும் இறங்கியும் காணப்படுகிறது. இந்த மாற்றத்தினால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். சென்னை கோயம்போடு சந்தையை பொருத்த வரை மற்ற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வந்து குவிந்து வருகின்றன. அவற்றின் விலை மட்டும் நாள் தோறும் மாற்றம் அடைந்தும், காய்கறிகளின் வரத்திற்கு ஏற்றார் போலவும் இருந்து வருகிறது.
இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்

தக்காளி ரூ. 15-25
நெல்லிக்காய் 70-76
பீன்ஸ் 30-55
பீட்ரூட் 20-40
பாகற்காய் 15-30
கத்திரிக்காய் 15-30
பட்டர் பீன்ஸ் 53-85
முட்டைகோஸ் 10-15
குடைமிளகாய் 10-30
கேரட் 50-90
காளிபிளவர் 20-40
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 20-32
பூண்டு 160- 450
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 25-50
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 10-20
மாங்காய் 100-180
மரவள்ளி 35-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 35-50
சின்ன வெங்காயம் 30-60
உருளை 40-60
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 160-260
வாழைப்பழம் 18-120
மாதுளை 100-260
திராட்சை 80-160
மாம்பழம் 50-220
தர்பூசணி 10-40
கிர்ணி பழம் 20-60
கொய்யா 16-90
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}