தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், புரட்டாசி 14 ம் தேதி செவ்வாய்கிழமை
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம். வங்கி அரையாண்டு கணக்கு முடிவு. அஷ்டமி. பகல் 02.52 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 04.22 வரை மூலம் நட்சத்திரமும், பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 04.22 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - கிருத்திகை, ரோகிணி
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக விற்க முடியாமல் இருந்த சொத்துக்களை இன்று விற்பது லாபமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பயணங்கள் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் கருத்துக்களை மேலதிகாரிகளிடம் சொல்லலாம். உங்கள் கருத்துக்களை அவர்கள் கேட்பார்கள். இதனால் உங்கள் மதிப்பு உயரும். கலைஞர்களுக்கு இசையில் ஆர்வம் அதிகரிக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்களிடையே சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். வெளியூர் பயணம் உங்களுக்கு வெற்றியைத் தரும். அதிர்ஷ்ட நிறம் பச்சை.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்தனை செய்வது நல்லது. பல காரியங்களில் தடைகள் வரலாம். எனவே, புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையில்லாத மன பயம் விலகும். பிள்ளைகளால் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். எதிர்பாராத நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும். மருத்துவர்களுக்கு பாராட்டு மழை பொழியும். தொலைபேசி மூலம் உங்கள் நட்பு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அதிர்ஷ்ட நிறம் பச்சை.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தம்பதிகளிடையே சிறிய சிக்கல்கள் வரலாம். ஆனால், உறவினர்களின் உதவியால் அதை சரி செய்து விடுவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பிள்ளைகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். வெளியூரில் இருந்து வரும் செய்தி மனதிற்கு தெம்பளிக்கும். பெற்றோரின் கனவுகள் இன்று பலிக்கும். அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உத்தியோகத்தில் அமைதியான சூழல் நிலவும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. உடல் நலம் சீராகும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை.
துலாம் - துலாம் ராசிக்காரர்கள் புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் சென்று வருவார்கள். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். சகோதரர்கள் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உங்கள் தேகம் பளிச்சிடும். உடலில் உற்சாகம் வெளிப்படும். அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். கலைஞர்களுக்கு பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். அரசியலில் உங்களுக்கு நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வார்கள். பெண்களுக்கு மாதவிடாய் வலி வந்து போகும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். உடல் வலிமை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம் கடல்நீலம்.
தனுசு - தனுசு ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் காட்ட வேண்டாம். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பார்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பார்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். உங்கள் தேகம் பளிச்சிடும். அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதிப்பர். அரசியலில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு கைக் கொடுப்பார்கள். உங்கள் முகம் புதுப்பொலிவு பெறும். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். பண வரவு சற்று தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பிரிந்த உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உங்களுக்கு வர வேண்டிய பணம் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். திருமணம் கோலாகலமாக நடக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இன்று கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் உங்களுக்கு நன்மை உண்டு. அக்கம் பக்கத்தாரிடம் உங்கள் நட்பு பலப்படும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை.. அன்புமணிக்கு அன்பில் மகேஷ் பதிலடி
அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?.. அன்பில் மகேஷ் தாக்கு!
விஜய் எப்போது மீண்டு வருவார்.. Weekend பிரச்சார வடிவம் மாறுமா?.. இதே கூட்டம் இனி வருமா??
சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி 2025 : வழிபடுவதற்கான நல்ல நேரம், வழிபடும் முறை
இன்று நவராத்திரி 9ம் நாள்...அம்பிகையை வழிபடும் முறை, மலர், பிரசாதம் விபரம்
ஆயுத பூஜை .. சரஸ்வதி பூஜை .. கல்விக்கும், தொழிலுக்கும் நன்றி செலுத்தும் தினம்!
வழிபாடு என்பது என்ன? .. What is Prayer!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 30, 2025... இன்று நினைத்தது நிறைவேறும் நாள்
கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
{{comments.comment}}