மகா சங்கடஹர சதுர்த்தி இன்று.. விசுவாசு வருடம் 20 25 ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை- இன்று முழுமுதற் கடவுள் ஆன விநாயகரை வழிபடும் மகா சங்கடஹர சதுர்த்தி தினமும், கடைசி ஆடிச் செவ்வாய்க்கிழமை அம்பிகையை வழிபடவும், முருகப்பெருமானை வழிபடவும் சிறப்பான நாளாக அமைந்துள்ளது.
வருடத்தில் பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்திகள் வருகின்றன அதில் 12வதாக விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம் இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் இந்த சிறப்பு வாய்ந்த மகா சங்கடஹர சதுர்த்தி அன்று நாம் விநாயகர் பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்வதனால் 11 சங்கடஹர சதுர்த்தியும் நாம் வழிபாடு செய்த பலன் கிடைக்கும். இன்றைய நாள் இத்தனை சிறப்பு வாய்ந்தது .இந்த மகா சங்கடஹர சதுர்த்தி அங்காரக சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது.
பிரணவத்தின் வடிவமே விநாயகர் இதன் திரிந்த வடிவமே "பிள்ளையார் சுழி." நம் எந்த ஒரு காரியத்தையும் முதலில் துவங்கும் பொழுது பிள்ளையார் சுழி போட்டு துவங்கினால் வெற்றி நிச்சயம் உண்டாகும், என்பது நம்பிக்கை.

வளர்பிறை சதுர்த்தியை வர சதுர்த்தி என்றும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது. முதன் முதலில் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவகிரகங்களில் ஒன்றானார். எனவே ,இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு "அங்காரக சதுர்த்தி" விரதம் என்றும் பெயர் வந்தது.
விநாயகர் காயத்ரி மந்திரம்:
"ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி பிரச்சோதயாத்"
ஓம் ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி பிரச்சோதயாத்.
கணபதி சுலோகம்:
"அல்லல்போம் வல்வினைப்போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகா துயரம் போம் நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்தில் மேவும் கணபதியை கை தொழுத கால்"
மகா சங்கடஹர சதுர்த்தி ஆன இன்று விநாயகர் வழிபாடு செய்து அருகம்புல் மாலை, மோதகம் நைவேத்தியம் வைத்து மேல் காணும் ஸ்லோகங்களை படிக்க சங்கடங்கள் யாவும் நீக்கி சர்வஐஸ்வர்யங்களை அள்ளிக் கொடுப்பார் விநாயகர்.
மேலும் தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும்" மகா சங்கடஹர சதுர்த்தி" நாளான இன்று விநாயகர் பெருமானின் அருள் முழுமையாக கிடைக்க நல்வாழ்த்துக்கள். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}