நெசவாளர்களை கௌரவிக்கும் ஒரு தினம்.. இந்தியா முழுவதும் இன்று.. தேசிய கைத்தறி தினம் கொண்டாட்டம்!

Aug 07, 2024,02:25 PM IST

சென்னை:   கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. 


நம் நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுகிறது. 1905 ஆம் ஆண்டு ஆகஸ்டு ஏழாம் ஆண்டு தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தில் உள்நாட்டு தொழிலாளர்கள், குறிப்பாக கைத்தறி நெசவாளர்கள் ஊக்குவிக்கப்பட்டது. சுதேசி இயக்கம் என்பது வெளிநாட்டு நிறுவனங்களால் இந்திய ஜவுளித்துறைக்கு எதிரான அமைதிப் போராட்டம் ஆகும்.இந்த சுதேசி இயக்கத்தின் நினைவாக தான், இந்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 தேதி முதல் தேசிய கைத்தறி தினமாக அறிவித்திருந்தது.




அதன்படி இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி பத்தாவது ஆண்டு  தேசிய கைத்தறி தினம் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நம் நாட்டின் கலாச்சார மற்றும் பாரம்பரியத்தினை பிரதிபலிக்கும் நிறுவனமாக நெசவாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தவே இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கைத்தறி தொழில்களில் சேலம், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் முக்கிய பங்கு வைக்கின்றன. இந்தத் துறையில் 70% பெண்கள் இருப்பதால் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்த துறை நேரடி தொடர்பை கொண்டுள்ளது. 2023- 24 நிதியாண்டில் உலக சந்தை மதிப்பில் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


அதேபோல் பத்தாவது தேசிய கைத்தறி தினம் இன்று டெல்லியில் உள்ள விக்யான்பவனில் கொண்டாடப்படுகிறது. இதில் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தலைமையில் மத்திய ஜவுளித்துறை வெளியுறவு மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வில் கைத்தறி துறையில் முக்கிய பங்கு வகித்த நெசவாளர்களை கௌரவிக்கும் பொருட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு சந்த் கபீர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.  இவ்விழாவில் இந்திய துணை குடியரசுத் தலைவர் இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தில்  நிலைத்தன்மை என்ற புத்தகத்தை வெளியிட இருக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த மலரும் சொல்லிக் கொள்வதில்லை!

news

சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

news

மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

news

Monday Motivation: இயற்கையைக் கொ(வெ)ல்லும் செயற்கை.. நல்லதல்ல விரைந்து விழிப்படைவோம்!

news

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

அதிகம் பார்க்கும் செய்திகள்