சில நேரங்களில் கேள்விகளாய் .. சில நேரங்களில் ஆச்சரியமாய்... அரிய பெட்டகமாய் நீ.. நன்றி புத்தகமே!

Aug 12, 2024,01:10 PM IST

- காயத்ரி கிருஷாந்த்


இன்று தேசிய நூலக தினம்.. சொத்துக்கள் குவிந்து கிடந்தாலும், சொந்தங்கள் கூடிக் கிடந்தாலும், நண்பர்கள் நாலாபுறமும் இருந்தாலும், புத்தகம்தான் இறுதி வரை நமக்கான அறிவையும் ஞானத்தையம் வழங்கும்.. தேடிச் சேர்த்த பொருட்களை விட திரட்டி சேகரித்த படிப்பும், அதனால் கிடைக்கும் புத்தியும்தான் இறுதிவரை நமக்கு துணை நிற்கும்.. நம்மைக் காக்கும்.


அப்படிப்பட்ட வாசிப்பு விரும்பிகளுக்குரிய நாள் இன்று. நூல்கள் பல படிப்போம்.. அறிவைப் பட்டைத் தீட்டுவோம்.. ஞானத்துடன் வாழ்வோம்.. தேசிய நூலக தினத்தையொட்டி ஒரு கவிதை.




என் காலடிபட்டதும்

" அமைதி காக்கவும் "என்று எச்சரிக்கிறாய் 

ஆயிரம் வார்த்தைகளுடன் என்னை அணுகுகிறாய்...

வெளியே அழகாக தெரிகிறாய்...

சில நேரங்களில் முற்றுப்புள்ளியாய் 

சில நேரங்களில் கேள்விகளாய் 

சில நேரங்களில் ஆச்சரியமாய்...

அரிய பெட்டகமாக நீ 

எதில் தொலைகிறேனோ அதில் உன்னை காண்கிறேன் கண்கொட்டாமல் காணாமல் போகிறேன்...


இருப்பையும் மறைக்கிறேன்...

உன்னுள் உறைகிறேன் கையில் வைத்து கொண்டாடுகிறேன்... 

நேரங்கள் போகவே மனமின்றி திருப்பி வைக்கிறேன்...

வருத்தத்தோடு நான்...

இளைப்பாற நீ இருப்பதால் இந்த ஏழையும் பணக்காரன் தான்...

இறுமாப்பின்றி நீ இருக்கின்றாய் பல இதயங்களை கொள்ளை கொண்டாலும்...

சில நேரங்களில் இறுமாப்புடன்தான் இருக்கிறாய்... 

நானும் என்னை போல் யாவரும் உன்னை காண 

உன் வாசல் வருவோம் என்று...

கடமைப்பட்டவன் நான்... விருந்தாளியான எனக்கு எப்போதும் விருந்தை மறக்காமல் படைக்கின்றாய்...

உன்னை படைத்தவருக்கும் நன்றி

உனக்கும் நன்றி

நீ 

இருக்கும் கோயிலுக்கும் நன்றி...

நன்றி புத்தகமே....

போய் வருகிறேன்....

மீண்டும் வருவேன் புத்தகமே உன்னை காண மீண்டும் வருவேன்!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்