- காயத்ரி கிருஷாந்த்
இன்று தேசிய நூலக தினம்.. சொத்துக்கள் குவிந்து கிடந்தாலும், சொந்தங்கள் கூடிக் கிடந்தாலும், நண்பர்கள் நாலாபுறமும் இருந்தாலும், புத்தகம்தான் இறுதி வரை நமக்கான அறிவையும் ஞானத்தையம் வழங்கும்.. தேடிச் சேர்த்த பொருட்களை விட திரட்டி சேகரித்த படிப்பும், அதனால் கிடைக்கும் புத்தியும்தான் இறுதிவரை நமக்கு துணை நிற்கும்.. நம்மைக் காக்கும்.
அப்படிப்பட்ட வாசிப்பு விரும்பிகளுக்குரிய நாள் இன்று. நூல்கள் பல படிப்போம்.. அறிவைப் பட்டைத் தீட்டுவோம்.. ஞானத்துடன் வாழ்வோம்.. தேசிய நூலக தினத்தையொட்டி ஒரு கவிதை.
என் காலடிபட்டதும்
" அமைதி காக்கவும் "என்று எச்சரிக்கிறாய்
ஆயிரம் வார்த்தைகளுடன் என்னை அணுகுகிறாய்...
வெளியே அழகாக தெரிகிறாய்...
சில நேரங்களில் முற்றுப்புள்ளியாய்
சில நேரங்களில் கேள்விகளாய்
சில நேரங்களில் ஆச்சரியமாய்...
அரிய பெட்டகமாக நீ
எதில் தொலைகிறேனோ அதில் உன்னை காண்கிறேன் கண்கொட்டாமல் காணாமல் போகிறேன்...
இருப்பையும் மறைக்கிறேன்...
உன்னுள் உறைகிறேன் கையில் வைத்து கொண்டாடுகிறேன்...
நேரங்கள் போகவே மனமின்றி திருப்பி வைக்கிறேன்...
வருத்தத்தோடு நான்...
இளைப்பாற நீ இருப்பதால் இந்த ஏழையும் பணக்காரன் தான்...
இறுமாப்பின்றி நீ இருக்கின்றாய் பல இதயங்களை கொள்ளை கொண்டாலும்...
சில நேரங்களில் இறுமாப்புடன்தான் இருக்கிறாய்...
நானும் என்னை போல் யாவரும் உன்னை காண
உன் வாசல் வருவோம் என்று...
கடமைப்பட்டவன் நான்... விருந்தாளியான எனக்கு எப்போதும் விருந்தை மறக்காமல் படைக்கின்றாய்...
உன்னை படைத்தவருக்கும் நன்றி
உனக்கும் நன்றி
நீ
இருக்கும் கோயிலுக்கும் நன்றி...
நன்றி புத்தகமே....
போய் வருகிறேன்....
மீண்டும் வருவேன் புத்தகமே உன்னை காண மீண்டும் வருவேன்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
{{comments.comment}}