- காயத்ரி கிருஷாந்த்
இன்று தேசிய நூலக தினம்.. சொத்துக்கள் குவிந்து கிடந்தாலும், சொந்தங்கள் கூடிக் கிடந்தாலும், நண்பர்கள் நாலாபுறமும் இருந்தாலும், புத்தகம்தான் இறுதி வரை நமக்கான அறிவையும் ஞானத்தையம் வழங்கும்.. தேடிச் சேர்த்த பொருட்களை விட திரட்டி சேகரித்த படிப்பும், அதனால் கிடைக்கும் புத்தியும்தான் இறுதிவரை நமக்கு துணை நிற்கும்.. நம்மைக் காக்கும்.
அப்படிப்பட்ட வாசிப்பு விரும்பிகளுக்குரிய நாள் இன்று. நூல்கள் பல படிப்போம்.. அறிவைப் பட்டைத் தீட்டுவோம்.. ஞானத்துடன் வாழ்வோம்.. தேசிய நூலக தினத்தையொட்டி ஒரு கவிதை.

என் காலடிபட்டதும்
" அமைதி காக்கவும் "என்று எச்சரிக்கிறாய்
ஆயிரம் வார்த்தைகளுடன் என்னை அணுகுகிறாய்...
வெளியே அழகாக தெரிகிறாய்...
சில நேரங்களில் முற்றுப்புள்ளியாய்
சில நேரங்களில் கேள்விகளாய்
சில நேரங்களில் ஆச்சரியமாய்...
அரிய பெட்டகமாக நீ
எதில் தொலைகிறேனோ அதில் உன்னை காண்கிறேன் கண்கொட்டாமல் காணாமல் போகிறேன்...
இருப்பையும் மறைக்கிறேன்...
உன்னுள் உறைகிறேன் கையில் வைத்து கொண்டாடுகிறேன்...
நேரங்கள் போகவே மனமின்றி திருப்பி வைக்கிறேன்...
வருத்தத்தோடு நான்...
இளைப்பாற நீ இருப்பதால் இந்த ஏழையும் பணக்காரன் தான்...
இறுமாப்பின்றி நீ இருக்கின்றாய் பல இதயங்களை கொள்ளை கொண்டாலும்...
சில நேரங்களில் இறுமாப்புடன்தான் இருக்கிறாய்...
நானும் என்னை போல் யாவரும் உன்னை காண
உன் வாசல் வருவோம் என்று...
கடமைப்பட்டவன் நான்... விருந்தாளியான எனக்கு எப்போதும் விருந்தை மறக்காமல் படைக்கின்றாய்...
உன்னை படைத்தவருக்கும் நன்றி
உனக்கும் நன்றி
நீ
இருக்கும் கோயிலுக்கும் நன்றி...
நன்றி புத்தகமே....
போய் வருகிறேன்....
மீண்டும் வருவேன் புத்தகமே உன்னை காண மீண்டும் வருவேன்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}