- தி. மீரா
ஒரே வீட்டின் சுவாசத்தில் பிறந்த நெஞ்சங்கள் நாம்,
ஒன்றே சிரிப்பில் ஒலிக்கும் இனிய இசை நாம்.
சண்டை போட்டாலும் சிதையாத பாசம் அது,
சில நொடியில் உருகி சேர்க்கும் நேசம் இது.
கண்ணீரில் கூட கையை பிடிக்கும் நிழல்
கனவுகள் எல்லாம் நனவாகும் பலம்
வாழ்க்கை பாதையில் வழி காட்டும்
விழுந்தாலும் எழுப்பும் உறுதி தரும்
உடன் பிறந்த பாசம் அளவில்லா செல்வம்,
உயிர் இருக்கும் வரை அழியாத உறவு

ஒன்றாக விளையாடினோம்
ஒன்றாக சாப்பிட்டோம்
நன்றாகப் பேசி சிரித்தோம் தினமும்
பண்டிகை நாட்களில் பலகாரம் பகிர்ந்தோம்
வண்டியில் ஏறி ஊரை வட்டம் அடித்தோம்
எண்ணங்கள் ஒன்றாக
எப்பொழுதும் நன்றாக
வண்ணங்கள் வாழ்க்கையில்
வசந்தத்தை காண்கையில்
வெற்றிடம் அடையாமல்
உறவைக் காக்கிறோம்
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}