- தி. மீரா
ஒரே வீட்டின் சுவாசத்தில் பிறந்த நெஞ்சங்கள் நாம்,
ஒன்றே சிரிப்பில் ஒலிக்கும் இனிய இசை நாம்.
சண்டை போட்டாலும் சிதையாத பாசம் அது,
சில நொடியில் உருகி சேர்க்கும் நேசம் இது.
கண்ணீரில் கூட கையை பிடிக்கும் நிழல்
கனவுகள் எல்லாம் நனவாகும் பலம்
வாழ்க்கை பாதையில் வழி காட்டும்
விழுந்தாலும் எழுப்பும் உறுதி தரும்
உடன் பிறந்த பாசம் அளவில்லா செல்வம்,
உயிர் இருக்கும் வரை அழியாத உறவு

ஒன்றாக விளையாடினோம்
ஒன்றாக சாப்பிட்டோம்
நன்றாகப் பேசி சிரித்தோம் தினமும்
பண்டிகை நாட்களில் பலகாரம் பகிர்ந்தோம்
வண்டியில் ஏறி ஊரை வட்டம் அடித்தோம்
எண்ணங்கள் ஒன்றாக
எப்பொழுதும் நன்றாக
வண்ணங்கள் வாழ்க்கையில்
வசந்தத்தை காண்கையில்
வெற்றிடம் அடையாமல்
உறவைக் காக்கிறோம்
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
குரங்குகளுக்கும் அடி சறுக்கும்!
நல்லவர் போல பலர் உண்டு.. எல்லோரும் நண்பர்கள் அல்ல!
காரணமே இல்லாமல் வரும் நேசம்.. ரொம்ப ரொம்ப அழகானது!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
திறனறிந்து உதவி செய்!
Self Confidence: எல்லாவற்றையும் விட தன்னம்பிக்கையே பிரதானம்!
அன்பைச் சொறியும் அருமை உடன் பிறப்பே!
National Siblings Day: ஒரு கூட்டுக் கிளியாக.. இன்று உடன் பிறப்புகள் தினம்!
{{comments.comment}}