National Siblings Day: ஒரு கூட்டுக் கிளியாக.. இன்று உடன் பிறப்புகள் தினம்!

Apr 10, 2026,05:41 PM IST

- தி. மீரா


ஒரே வீட்டின் சுவாசத்தில் பிறந்த நெஞ்சங்கள் நாம்,

ஒன்றே சிரிப்பில் ஒலிக்கும் இனிய இசை நாம்.

சண்டை போட்டாலும் சிதையாத பாசம் அது,

சில நொடியில் உருகி சேர்க்கும் நேசம் இது.

கண்ணீரில் கூட கையை பிடிக்கும் நிழல் 

கனவுகள் எல்லாம் நனவாகும் பலம் 


வாழ்க்கை பாதையில் வழி காட்டும் 

விழுந்தாலும் எழுப்பும் உறுதி தரும்


உடன் பிறந்த பாசம் அளவில்லா செல்வம்,

உயிர் இருக்கும் வரை அழியாத உறவு 




ஒன்றாக விளையாடினோம்

ஒன்றாக சாப்பிட்டோம்

நன்றாகப் பேசி சிரித்தோம் தினமும்


பண்டிகை நாட்களில் பலகாரம் பகிர்ந்தோம்

வண்டியில் ஏறி ஊரை வட்டம் அடித்தோம்


எண்ணங்கள் ஒன்றாக 

எப்பொழுதும் நன்றாக


வண்ணங்கள் வாழ்க்கையில்

வசந்தத்தை காண்கையில்


வெவ்வேறு ஊரிலே

இருந்தாலும் நாம்

வெற்றிடம் அடையாமல்

உறவைக் காக்கிறோம்


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

news

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!

news

Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!

news

முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!

news

Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!

news

My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்