Teachers day: கருவறைக்கு அம்மா.. கல்வி அறைக்கு ஆசிரியர்.. கல்விக்கண் திறந்த கடவுள்கள் தினம்!

Sep 05, 2024,12:38 PM IST

கருவறைக்கு அம்மா!

கல்வி அறைக்கு ஆசிரியர்!

கல்விக்கண் திறந்த கடவுள்கள் தினம்

கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் தினம்!

சுயநலம் பாராமல் பொதுநலம் பாராட்டி

உளி கொண்டு செதுக்காமல் மொழிகொண்டு செதுக்கும் சிற்பிகளாம் 

ஆசிரியர்கள் தினமான இன்று ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல 

பயிற்றுவித்த ஆசிரியர்களை பட்டியலிட முனைந்தேன்!




முதலில் வந்து நின்றார் அம்மா!

பாசம் கொட்டிக் கொடுத்தவரே முதலில் பேசக் கற்றுக் கொடுத்தார்!

அடுத்து வந்து நின்றார் அப்பா!

வெளியுலகம் கற்றுக் கொடுத்தார்!

கற்றுக் கொள்ள வேண்டாதன பதமாய்க் கற்றுக் கொடுத்தார்!

அடுத்தடுத்து வந்தனர் 

நட்புகள், உறவுகள்!

அனைவரிடமும் ஏதோ ஒன்று கற்றேன்!

ஒவ்வொருவரிடமும் பாடம் ஒன்று பெற்றேன்!


அடுத்து வந்தனர் பள்ளி முதலாய் கல்லூரி முடியும் வரை உள்ள ஆசிரியர்கள்!

கரும்பலகை தான்மெழுகி

அரிச்சுவடி கற்றுத்தந்த

முதல் வகுப்பு ஆசிரியர் நிற்கிறார் இன்றுவரை நெஞ்சத்தில் நிறம் மாறாப் பசுமையாய்!

தமிழ் என்னும் அமிர்தம் தன்னை

அன்புடன் அரவணைத்து ஊட்டிய அன்னையான எனது தமிழாசிரியர்,

ஆங்கில இலக்கியத்தை எனது ஆறறிவுக்குள்

அழகாய்ப் புகுத்திய

ஆங்கில ஆசிரியர்,

கடினமான கணக்குப் பாடத்தினைக் கனிவுடன் பயிற்றுவித்த கணித ஆசிரியர்,

சோதனைச் சாலையில் அமிலம் தந்த காயத்தால்

அரண்டு போய் நின்றபோது அன்பு செய்து அறிவியல் பாடத்தை ஆற்றலுடன் கற்றுத்தந்த அறிவியல் ஆசிரியர்,

வரலாற்று நிகழ்வுகளை மனதில் ஆழமாகப் பதியும்படி

பாங்குடன் பயிற்றுவித்த வரலாற்று ஆசிரியர் 

ஆகியோர் நின்றனர்

பரிவின் திருவுருவாய்!

இவர்களுடன் தட்டிக் கொடுத்து மனதோடு ஒட்டி நின்ற கல்லூரி ஆசிரியர்கள் பட்டியலும் இதில் அடக்கம்!


இப்போது சந்திக்கும்

சக மனிதர்களிடமும்

கற்கின்றேன் 

நிதம் பாடம்!

கற்றல் என்னும் துடுப்பினாலே

நல் திசை நோக்கியே நகர்கிறது 

எனது வாழ்க்கை என்னும் ஓடம்!

சில ஆசிரியர்களை நினைக்கையில் எனது விழிகள் நனைத்திருப்பேன்!

கற்பித்த ஆசிரியர்கள்

அனைவரையும் என்றென்றும் நன்றியுடன் நினைத்திருப்பேன்

நான் இருக்கும் வரை!

அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!

நன்றி!


கவிதை:


V.Rajeswari,

Assistant,

College Office,

The Madura College

(Autonomous),

Madurai -625 011.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்