செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

Jun 10, 2025,11:24 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாவசு வருடம் 20 25 ஜூன் 10ஆம் தேதி வைகாசி 27ஆம் நாள் செவ்வாய் கிழமையுடன் சேர்ந்து வரும் பௌர்ணமி நிறைந்த சிறப்பும் மகிமையும் மிகுந்தது


பௌர்ணமி நேரம்: ஜூன் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பகல் 12: 27 மணிக்கு துவங்கி ஜூன் 11ஆம் தேதி பகல்0 1: 53 வரை பௌர்ணமி திதி உள்ளது .பௌர்ணமி வழிபாடு என்பது சந்திர உதயத்திற்கு பிறகு மாலையில் செய்வது சிறப்பு. அதனால் ஜூன் 10ஆம் தேதி பௌர்ணமி நாளாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இன்று செவ்வாய்க்கிழமை பௌர்ணமி திதி அமைந்துள்ளதால் அம்பிகை வழிபாடும் முருகன் வழிபாடும் செய்வதற்கு உகந்த நாள்.


செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்குரிய வழிபாட்டு நாளாக கருதப்படுவதனால் செவ்வரளி மலர்கள்  சாற்றி முருகன் வழிபாடும், துர்க்கை அம்மன் வழிபாடும் செய்ய சகல செல்வ வளங்களும், திருமண தடை உள்ளவர்கள் வழிபாடு செய்ய அவர்களது கோரிக்கைகள் நிறைவேறும் நாளாக அமைந்துள்ளது.




பௌர்ணமி தினமான இன்று குலதெய்வ வழிபாடு செய்யவும் சிவன் அம்பிகை முருகன் வழிபாடு செய்யவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். பௌர்ணமி தினத்தன்று வீடுகளில் சத்யநாராயண பூஜை செய்வதால், அவரவர் குடும்ப சூழ்நிலை பிரச்சனைகள்  மாறும், வறுமை நிலை மாற்றம் பெற்று செல்வ வளம் பெருகி சுபிட்சம் உண்டாகும்.


மாதம் தோறும் வரும் பௌர்ணமி இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மதத்தில் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுவதால் சந்திரன் முழுமையாக ஒளிரும் இந்த நாளில் பல ஆன்மீக செயல்கள் தெய்வீக பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.


பௌர்ணமி நாளில் தியானம் ,தானம், பூஜைகள் ,பிரார்த்தனை, முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் போன்ற நடைமுறைகளை மேற்கொள்வது நமது குடும்ப நலனும் நம் சந்ததியினர் வாழ்க்கையும் நன்றாக அமையும்.


வட சாவித்திரி விரதம்: வடநாட்டில் இருப்பவர்கள் இன்று கௌரி பூஜை செய்து மாங்கல்ய கயிறு கட்டிக் கொள்வார்கள். சாவித்திரி கதை படிப்பார்கள். மேலும் விஷ்ணு வழிபாடு செய்யவும் ,விஷ்ணுவிற்கு துளசி மாலைகள்  சாற்றி, வெள்ளை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்வது சிறப்பு.


இந்த பௌர்ணமி நன்னாளில் புனித நதிகளில் நீராடுதல் குறிப்பாக கங்கா, யமுனா காவிரி நதிகளில் நீராடுதல் பாவங்களை போக்குகிறது என்று நம்பப்படுகிறது. சந்திரன் முழுமையாக பிரகாசிக்கும் இந்த பௌர்ணமி நாளில் மன அமைதி ,ஞானம் ,கவனம் போன்றவை அதிகரிக்கும். உளவியல் ரீதியாகவும் இந்த நாள் தியானம் செய்வது மன உறுதியை மேம்படுத்துகிறது.


மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்