- ஸ்வர்ணலட்சுமி
விசுவாவசு வருடம் 20 25 ஜூன் 10ஆம் தேதி வைகாசி 27ஆம் நாள் செவ்வாய் கிழமையுடன் சேர்ந்து வரும் பௌர்ணமி நிறைந்த சிறப்பும் மகிமையும் மிகுந்தது
பௌர்ணமி நேரம்: ஜூன் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பகல் 12: 27 மணிக்கு துவங்கி ஜூன் 11ஆம் தேதி பகல்0 1: 53 வரை பௌர்ணமி திதி உள்ளது .பௌர்ணமி வழிபாடு என்பது சந்திர உதயத்திற்கு பிறகு மாலையில் செய்வது சிறப்பு. அதனால் ஜூன் 10ஆம் தேதி பௌர்ணமி நாளாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இன்று செவ்வாய்க்கிழமை பௌர்ணமி திதி அமைந்துள்ளதால் அம்பிகை வழிபாடும் முருகன் வழிபாடும் செய்வதற்கு உகந்த நாள்.
செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்குரிய வழிபாட்டு நாளாக கருதப்படுவதனால் செவ்வரளி மலர்கள் சாற்றி முருகன் வழிபாடும், துர்க்கை அம்மன் வழிபாடும் செய்ய சகல செல்வ வளங்களும், திருமண தடை உள்ளவர்கள் வழிபாடு செய்ய அவர்களது கோரிக்கைகள் நிறைவேறும் நாளாக அமைந்துள்ளது.

பௌர்ணமி தினமான இன்று குலதெய்வ வழிபாடு செய்யவும் சிவன் அம்பிகை முருகன் வழிபாடு செய்யவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். பௌர்ணமி தினத்தன்று வீடுகளில் சத்யநாராயண பூஜை செய்வதால், அவரவர் குடும்ப சூழ்நிலை பிரச்சனைகள் மாறும், வறுமை நிலை மாற்றம் பெற்று செல்வ வளம் பெருகி சுபிட்சம் உண்டாகும்.
மாதம் தோறும் வரும் பௌர்ணமி இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மதத்தில் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுவதால் சந்திரன் முழுமையாக ஒளிரும் இந்த நாளில் பல ஆன்மீக செயல்கள் தெய்வீக பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
பௌர்ணமி நாளில் தியானம் ,தானம், பூஜைகள் ,பிரார்த்தனை, முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் போன்ற நடைமுறைகளை மேற்கொள்வது நமது குடும்ப நலனும் நம் சந்ததியினர் வாழ்க்கையும் நன்றாக அமையும்.
வட சாவித்திரி விரதம்: வடநாட்டில் இருப்பவர்கள் இன்று கௌரி பூஜை செய்து மாங்கல்ய கயிறு கட்டிக் கொள்வார்கள். சாவித்திரி கதை படிப்பார்கள். மேலும் விஷ்ணு வழிபாடு செய்யவும் ,விஷ்ணுவிற்கு துளசி மாலைகள் சாற்றி, வெள்ளை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்வது சிறப்பு.
இந்த பௌர்ணமி நன்னாளில் புனித நதிகளில் நீராடுதல் குறிப்பாக கங்கா, யமுனா காவிரி நதிகளில் நீராடுதல் பாவங்களை போக்குகிறது என்று நம்பப்படுகிறது. சந்திரன் முழுமையாக பிரகாசிக்கும் இந்த பௌர்ணமி நாளில் மன அமைதி ,ஞானம் ,கவனம் போன்றவை அதிகரிக்கும். உளவியல் ரீதியாகவும் இந்த நாள் தியானம் செய்வது மன உறுதியை மேம்படுத்துகிறது.
மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}