அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்

Aug 14, 2025,03:01 PM IST

சென்னை: என்னையும், கெளரவ தலைவர் மணியையும் திட்டமிட்டு ஒரு கும்பல் அவதூறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. பணம் கொடுத்து எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.போற்றுவோர் போற்றட்டும். புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரத்தில் இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், வன்னியர் சங்க மகளிர் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள். இதனைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ள பாமகவின்


சிறப்பு பொதுக் குழு கூட்டம் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுவாகவும் இருக்கும். இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 49 மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிகிறது. அப்படி  செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 




சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அகழாய்வில் தமிழ்நாடு எப்போதுமே முன் மாதிரி மாநிலம் தான். கீழடி, பொற்கை, ஆதிச்சநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் வரிசையில் புதுக்கோட்டை மாவட்டமும் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 


என்னையும், கெளரவ தலைவர் மணியையும் திட்டமிட்டு ஒரு கும்பல் அவதூறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. பணம் கொடுத்து எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.போற்றுவோர் போற்றட்டும்.புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். என்னைப்பற்றி சொல்வற்கு என்ன இருக்கிறது. மக்களுக்கு பயன்படும் அரிசியாக நாங்கள் இருக்கிறோம். பதராக அவர்கள் இருக்கிறார்கள். பதர்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவர்களுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

news

சென்னையில் எப்ப Rain சீன் தெரியுமா.. 23 டூ 30.. செம மழை இருக்காம்.. என்ஜாய் பண்ண ரெடியாகுங்க!

news

கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

கரூர் உயிரிழப்பு சம்பவம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது: சீமான்!

news

அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது.. கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன்: ராமதாஸ்!

news

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. கேன்சல்லேஷன் கட்டணம் இல்லாமலேயே டிக்கெட்டை மாத்திக்கலாம்!

news

புதிய உச்சத்தில் தங்கம் விலை...ஒரு கிராம் ரூ.12,000 ஐ நெருங்கியது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

news

ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம்.. பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தகவல்.. ராகுல் காந்தி கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்