சென்னை: தங்கம் வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.6780க்கும், சவரன் ரூ.54,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே உள்ளது.
கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் நேற்று உயர்ந்திருந்த நிலையில் இன்றும் உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.80 மட்டும் உயர்ந்திருந்த தங்கம் இன்று கிராமிற்கு ரூ.80 உயர்ந்து, சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இந்த அதிரடியான விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை நிலையற்ற நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையற்ற விலையினால் நகைப்பிரியர்கள் சற்று கலக்கம் அடைந்து வருகின்றனர்.இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காரணமாக இந்த விலை ஏற்றம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,780 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 80 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.640 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,240 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,397 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,176 ஆக உள்ளது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை...
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ரூ. 1.40 காசுகள் உயர்ந்து ரூ.98.50 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 788 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.97,100க்கு விற்கப்பட்டது, இன்று ரூ.98.500 விற்கப்படுகிறது. ஒரு கிலோவிற்கு இன்று மட்டும் ரூ.1,400 உயர்ந்துள்ளது.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}