சென்னை: தங்கம் வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.6780க்கும், சவரன் ரூ.54,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே உள்ளது.
கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் நேற்று உயர்ந்திருந்த நிலையில் இன்றும் உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.80 மட்டும் உயர்ந்திருந்த தங்கம் இன்று கிராமிற்கு ரூ.80 உயர்ந்து, சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இந்த அதிரடியான விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை நிலையற்ற நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையற்ற விலையினால் நகைப்பிரியர்கள் சற்று கலக்கம் அடைந்து வருகின்றனர்.இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காரணமாக இந்த விலை ஏற்றம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,780 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 80 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.640 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,240 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,397 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,176 ஆக உள்ளது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை...
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ரூ. 1.40 காசுகள் உயர்ந்து ரூ.98.50 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 788 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.97,100க்கு விற்கப்பட்டது, இன்று ரூ.98.500 விற்கப்படுகிறது. ஒரு கிலோவிற்கு இன்று மட்டும் ரூ.1,400 உயர்ந்துள்ளது.
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
{{comments.comment}}