சரசரன்னு ஏறி.. சரக்குன்னு இறங்கிய தக்காளி விலை.. மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!

Aug 16, 2023,01:36 PM IST
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தக்காளி விலை ஏறுமுகமாக இருந்து வந்த நிலையில், தற்போது தக்காளி விலை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் மன நிம்மதி அடைந்துள்ளனர்.

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயிரம் மொத்த கடைகளும் , 2000 சில்லறை கடைகளும் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றன. இது மிகப்பெரிய சந்தை ஆகும். 



கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து வந்தது. கடந்த ஜூன் மாதம் இறுதியில் தக்காளி விலை ரூ. 150 என்ற உச்சத்தைத் தொட்டது. இதனால் சில்லறை விற்பனையிலும் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து மக்களை அயர வைத்தது. தக்காளி சட்னியே கிடையாது என்று வீடுகளில் போர்டு வைக்காத குறையாக இல்லத்தரசிகள் தக்காளியை தூர வைக்க ஆரம்பித்தனர்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதுமே தக்காளி விலை உயர்ந்தபடியேதான் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது. சென்னையிலும், பிற ஊர்களிலும் தக்காளி விலை கடுமையாக சரிந்து வருகிறது. 

நேற்று முன்தினம் தக்காளி விலை கிலோ ரூ. 50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது .ஆனால் இன்று பத்து ரூபாய் குறைந்து கிலோ ரூபாய் நாற்பதுக்கு விற்பனை செய்யப்படுகிறது . தக்காளி விலையின் மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கோயம்பேடு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்த மார்க்கெட்டில் விலை குறைந்தாலும் கூட சில்லறைக் கடைகளில் விலையைக் குறைக்காமலேயே வியாபாரிகள் விற்பதால் மக்கள் முழு மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. பெரும்பாலான புறநகர்க் கடைகளில் கிலோ தக்காளி ரூ. 90 வரை விற்கப்படுவதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். கோயம்பேட்டிலிருந்து மிஞ்சிப் போனால் 30 கிலோமீட்டருக்குள் சென்னை புறநகர்கள் முடிந்து விடும். அப்படி இருக்கும்போது குறைந்தது 40 ரூபாய் வரை அதிகம் விற்பனையாவது ஏன் என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!

news

கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!

news

புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!

news

சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை

news

மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!

news

பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!

news

பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா

அதிகம் பார்க்கும் செய்திகள்