சென்னை: சென்னையில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வகுப்புகள் இருப்பதனால் சென்னை மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கன மழை எச்சரிக்கையும், பல இடங்களில் பள்ளிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதாலும் கூட நாளை விடுமுறை விடப்பட ஒரு காரணமாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழை நாளை மறுதினம் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் நான்காம் தேதி சென்னைக்கு ஆந்திராவில் மசூலிப்பட்டினத்திற்கு இடையே புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மழைக்காக இல்லாமல் , ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்காக நாளை லீவு கிடைத்துள்ளதால், சென்னை மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் குஷியாகியுள்ளனர். அடுத்து திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் புயல் காரணமாகவும் லீவு கிடைக்கு வாய்ப்பிருப்பதாக மாணவர்கள் அடுத்தடுத்த விடுமுறைகளுக்கும் ஆவலுடன் காத்துள்ளனர்.
வேற லெவல் சாட்ஜிபிடி.. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. ஏ+ மார்க் வாங்கி அசத்திய ஆய்வு மாணவர்!
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி மரணம்.. திரையுலகினர் அஞ்சலி
Cheating case: 78 வயது மூதாட்டியிடம் மோசடி.. 21 வயது இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது!
டாப்ஸ்லிப் மலைப்பகுதியில்.. மலையேற்றத்தின் போது கேரளாவை சேர்ந்த மருத்துவர் உயிரிழப்பு..!
வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி.. டிரம்ப் அதிரடி.. இந்தியப் படங்களுக்கு பாதிப்பு வருமா?
கவனக்குறைவான டிரைவிங்.. மதுரை ஆதீனத்தின் டிரைவர் மீது கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மே 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தமிழ்நாட்டில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு ..இந்திய வானிலை ஆய்வு மையம்!
கும்மிருட்டில் மூழ்கிய சென்னை.. பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கன மழையால் மக்கள் ஹேப்பி!