சென்னை: சென்னையில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வகுப்புகள் இருப்பதனால் சென்னை மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கன மழை எச்சரிக்கையும், பல இடங்களில் பள்ளிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதாலும் கூட நாளை விடுமுறை விடப்பட ஒரு காரணமாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழை நாளை மறுதினம் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் நான்காம் தேதி சென்னைக்கு ஆந்திராவில் மசூலிப்பட்டினத்திற்கு இடையே புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மழைக்காக இல்லாமல் , ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்காக நாளை லீவு கிடைத்துள்ளதால், சென்னை மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் குஷியாகியுள்ளனர். அடுத்து திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் புயல் காரணமாகவும் லீவு கிடைக்கு வாய்ப்பிருப்பதாக மாணவர்கள் அடுத்தடுத்த விடுமுறைகளுக்கும் ஆவலுடன் காத்துள்ளனர்.
கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!
2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி
அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை
குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு
ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்
விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்
True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!
{{comments.comment}}