சென்னை மாநகராட்சி பெண் டபேதார் மாதவி திடீர் இடமாற்றம்.. காரணம் அது இல்லையாம்.. இதுதானாம்!

Sep 25, 2024,04:12 PM IST

சென்னை: லிப்ஸ்டிக் பூசியதற்காக சென்னை மாநகராட்சி மேயரின் பெண் தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்திருப்பதாக தகவல் பரவிய நிலையில், அதை மறுத்து சென்னை மேயர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. 


டபேதார் மாதவி பணியை சரிவர செய்யாத காரணத்தினாலும், அலட்சியமாக இருந்ததாலும்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.


சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை பெற்றவர் பிரியா. மாநகராட்சித் தேர்தலில் 74வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார். 29 வயதில் பிரியா சென்னை மாநகராட்சியில் மேயராக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இவரை கேலி செய்தவர்கள் கூட மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட்டு கலக்கி வருகிறார்.




குறிப்பாக கொரோனா மற்றும் மழை வெள்ள காலங்களில் இரவு பகல் பாராது பணி செய்து மக்கள் ஆதரவைப் பெற்றார். எறும்பு போல சுறுசுறுப்பாக இவர் செயல்படுவதால் திமுகவினர் மத்தியில் மட்டுமல்லாமல் இவரை விமர்சிப்பவர்கள் மத்தியிலும் கூட தனி மரியாதையுடன் வலம் வருகிறார் மேயர் பிரியா.


இந்த நிலையில் முதல் முறையாக ஒரு சர்ச்சை மேயர் பிரியாவைச் சுற்றி வருகிறது. மேயராக பிரியா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவரது உதவியாளராக அதாவது தபேதாராக, மாதவி நியமிக்கப்பட்டார். இவர்தான் சென்னையின் முதல் பெண் தபேதார். மேயருக்கு முன்னே செங்கோலை ஏந்தியும் கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவதும் தபேதாரின் பணி. இந்த பணியை செய்து வந்த மாதவி திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


இதற்கு ஒரு சர்ச்சையான காரணம் கூறப்பட்டது. அதாவது மாதவி லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உள்ளவராம். அதுவும் பளிச்சென தெரியும்படி அடர்த்தியாக லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டுதான் வருவாராம். ஆனால் இப்படி லிப்ஸ்டிக் போடக் கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டதாம்.  ஆனால், இது போன்ற அறிவுரைகள் மனித உரிமைக்கு எதிரானது என்றும், லிப்ஸ்டிக் போடக்கூடாது என அரசாங்க உத்தரவு எதுவும் இல்லை என மாதவி தரப்பில் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து மாதவி மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, இது விமர்சனத்தைக் கிளப்பியது. 


இந்த நிலையில் இதுகுறித்து  மேயர் அலுவலகத் தரப்பில் வெளியாகியுள்ள விளக்கத்தில், சரிவர பணியைக் கவனிக்காத காரணத்தாலும், பணியில் அலட்சியம் காட்டியதாலும்தான் மாதவி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், மற்றபடி அவர் லிப்ஸ்டிக் போட்டு வந்ததற்காக இடமாற்றம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்