திருச்சி: திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே பிரபல ரவுடி கலைப்புலி ராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பிரபல ரவுடி கலைப்புலி ராஜாவை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த ரவுடி தப்பிக்க முயன்று ஓடினார். அவரை போலீசார் பின் தொடரவே மணச்சநல்லூர் அருகே துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
போலீசார் சுட்டதில் ரவுடி கலைப்புலி ராஜாவுக்கு காலில் குண்டுக் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கலைப்புலி ராஜா பயங்கரமான ரவுடியாம். சமீபத்தில் இவரது நண்பரான நவீன் குமார் என்பவரை தனது ஆட்களோடு சேர்ந்து சரமாரியாக வெட்டிக் கொன்றவர். லால்குடி அருகே மதுக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி கொலையில் முடிந்தது.
ராஜாவும், நவீன்குமாரும் நீண்ட கால நண்பர்களாம். ஆனால் சில பிரச்சினைகளால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்தது. கடைசியில் இது நவீன்குமாரின் கொலையில் போய் முடிந்தது. இந்தக் கொலை வழக்கில்தான் ராஜாவை போலீஸார் தேடி வந்தனர். ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தப் பின்னணியில்தான் ராஜாவை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துக் கைது செய்துள்ளனர் போலீஸார்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}