சென்னை: நடிகை திரிஷா வளர்த்து வந்த நாய் ஜோரோ இறந்து போய் விட்டது. இதனால் பெரும் வேதனை அடைந்துள்ளார் திரிஷா. தனது மகன் இறந்து விட்டதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
செல்லப் பிராணிகளிடம் மிகுந்த அன்பு செலுத்தக் கூடியவர் நடிகை திரிஷா. அவர் நாய் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான நாய்தான் இந்த ஜோரோ. அதை நாய் என்றே கூற மாட்டார். தனது மகன் என்றுதான் எல்லோரிடமும் சொல்வார். அந்த அளவுக்கு பாசத்தையும், அன்பையும் கலந்து அதை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை ஜோரோ இறந்து விட்டது. இதனால் திரிஷா பெரும் வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எனது மகன் ஜோரோ, கிறிஸ்துமஸ் நாளின் காலையில் மரணமடைந்து விட்டான். என்னைத் தெரிந்த எல்லோருக்குமே தெரியும், எனது உலகமே ஜோரோதான் என்று. அவன் இல்லாத உலகில் எனது வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விட்டது. நானும் எனது குடும்பத்தினரும் மனம் உடைந்து போயுள்ளோம். எனது வழக்கமான பணிகளில் சிறிது காலம் கழித்து நான் இணைகிறேன் என்று கூறியுள்ளார் திரிஷா.
நடிகை திரிஷாவுக்கு தற்போது 41 வயதாகிறது. அஜீத்துடன் விடாமுயற்சி படத்தில் அவர் நடித்து வருகிறார். அதேபோல குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா இணைந்துள்ளார். அதேபோல சூர்யாவுடனும் அடுத்து நடிக்கவுள்ளார். மலையாளத்திலும் டொவினோ தாமஸுடன் இணையப் போகிறார். கமல்ஹாசனுடன் தக்லைப் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் விரைவில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்திலும் திரிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜோரோ அவரது வீட்டில் வளர்ந்து வந்தது. மிக நீண்ட காலம் திரிஷாவுடன் ஜோரோ இணைந்திருந்ததால் அதன் பிரிவை திரிஷாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மறைந்த ஜோரோவின் உடல், திரிஷா வீட்டு வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜோரோவை இழந்து வாடும் திரிஷாவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களும் ஆறுதலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}