சென்னை: நடிகை திரிஷா வளர்த்து வந்த நாய் ஜோரோ இறந்து போய் விட்டது. இதனால் பெரும் வேதனை அடைந்துள்ளார் திரிஷா. தனது மகன் இறந்து விட்டதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
செல்லப் பிராணிகளிடம் மிகுந்த அன்பு செலுத்தக் கூடியவர் நடிகை திரிஷா. அவர் நாய் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான நாய்தான் இந்த ஜோரோ. அதை நாய் என்றே கூற மாட்டார். தனது மகன் என்றுதான் எல்லோரிடமும் சொல்வார். அந்த அளவுக்கு பாசத்தையும், அன்பையும் கலந்து அதை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஜோரோ இறந்து விட்டது. இதனால் திரிஷா பெரும் வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எனது மகன் ஜோரோ, கிறிஸ்துமஸ் நாளின் காலையில் மரணமடைந்து விட்டான். என்னைத் தெரிந்த எல்லோருக்குமே தெரியும், எனது உலகமே ஜோரோதான் என்று. அவன் இல்லாத உலகில் எனது வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விட்டது. நானும் எனது குடும்பத்தினரும் மனம் உடைந்து போயுள்ளோம். எனது வழக்கமான பணிகளில் சிறிது காலம் கழித்து நான் இணைகிறேன் என்று கூறியுள்ளார் திரிஷா.
நடிகை திரிஷாவுக்கு தற்போது 41 வயதாகிறது. அஜீத்துடன் விடாமுயற்சி படத்தில் அவர் நடித்து வருகிறார். அதேபோல குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா இணைந்துள்ளார். அதேபோல சூர்யாவுடனும் அடுத்து நடிக்கவுள்ளார். மலையாளத்திலும் டொவினோ தாமஸுடன் இணையப் போகிறார். கமல்ஹாசனுடன் தக்லைப் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் விரைவில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்திலும் திரிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜோரோ அவரது வீட்டில் வளர்ந்து வந்தது. மிக நீண்ட காலம் திரிஷாவுடன் ஜோரோ இணைந்திருந்ததால் அதன் பிரிவை திரிஷாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மறைந்த ஜோரோவின் உடல், திரிஷா வீட்டு வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜோரோவை இழந்து வாடும் திரிஷாவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களும் ஆறுதலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}