சென்னை: நடிகை திரிஷா வளர்த்து வந்த நாய் ஜோரோ இறந்து போய் விட்டது. இதனால் பெரும் வேதனை அடைந்துள்ளார் திரிஷா. தனது மகன் இறந்து விட்டதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
செல்லப் பிராணிகளிடம் மிகுந்த அன்பு செலுத்தக் கூடியவர் நடிகை திரிஷா. அவர் நாய் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான நாய்தான் இந்த ஜோரோ. அதை நாய் என்றே கூற மாட்டார். தனது மகன் என்றுதான் எல்லோரிடமும் சொல்வார். அந்த அளவுக்கு பாசத்தையும், அன்பையும் கலந்து அதை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஜோரோ இறந்து விட்டது. இதனால் திரிஷா பெரும் வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எனது மகன் ஜோரோ, கிறிஸ்துமஸ் நாளின் காலையில் மரணமடைந்து விட்டான். என்னைத் தெரிந்த எல்லோருக்குமே தெரியும், எனது உலகமே ஜோரோதான் என்று. அவன் இல்லாத உலகில் எனது வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விட்டது. நானும் எனது குடும்பத்தினரும் மனம் உடைந்து போயுள்ளோம். எனது வழக்கமான பணிகளில் சிறிது காலம் கழித்து நான் இணைகிறேன் என்று கூறியுள்ளார் திரிஷா.
நடிகை திரிஷாவுக்கு தற்போது 41 வயதாகிறது. அஜீத்துடன் விடாமுயற்சி படத்தில் அவர் நடித்து வருகிறார். அதேபோல குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா இணைந்துள்ளார். அதேபோல சூர்யாவுடனும் அடுத்து நடிக்கவுள்ளார். மலையாளத்திலும் டொவினோ தாமஸுடன் இணையப் போகிறார். கமல்ஹாசனுடன் தக்லைப் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் விரைவில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்திலும் திரிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜோரோ அவரது வீட்டில் வளர்ந்து வந்தது. மிக நீண்ட காலம் திரிஷாவுடன் ஜோரோ இணைந்திருந்ததால் அதன் பிரிவை திரிஷாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மறைந்த ஜோரோவின் உடல், திரிஷா வீட்டு வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜோரோவை இழந்து வாடும் திரிஷாவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களும் ஆறுதலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
{{comments.comment}}