உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் ஆம்னி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே 2 பலியாயினர். 20 மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உளுந்தூர்பேட்டையில் அதிகாலையில் கோர விபத்து ஏற்பட்டது. சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. உளுந்தூர்பேட்டை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் மோதி, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரு வாகனங்களும் உருக்குலைந்தன. விபத்தில் லாரி மற்றும் ஆம்னி பேருந்து டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். 20 மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}