உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் ஆம்னி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே 2 பலியாயினர். 20 மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உளுந்தூர்பேட்டையில் அதிகாலையில் கோர விபத்து ஏற்பட்டது. சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. உளுந்தூர்பேட்டை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் மோதி, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரு வாகனங்களும் உருக்குலைந்தன. விபத்தில் லாரி மற்றும் ஆம்னி பேருந்து டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். 20 மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
{{comments.comment}}