ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!

Jul 30, 2025,06:05 PM IST

டோக்கியோ/மாஸ்கோ: மிகப் பெரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.


இன்று அதிகாலையில் ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் வடக்கு பசிபிக் பிராந்தியத்தில் சுனாமி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அலாஸ்கா, ஹவாய் மற்றும் நியூசிலாந்து வரையிலான பிற கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.


ஹொனலுலுவில் செவ்வாய்க்கிழமை சுனாமி எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. இதையடுத்து மக்கள் உயரமான பகுதிகளுக்கு நகர்ந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதல் ஜப்பானிலும் தாக்கியுள்ளது. ஜப்பானின் முக்கிய தீவுகளில் வடக்கே உள்ள ஹொக்கைடோவின் தெற்குக் கடற்கரையில் உள்ள டோகாச்சியில் 40 சென்டிமீட்டர் (1.3 அடி) உயரமுள்ள சுனாமி தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பப் பகுதியில்தான் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. இதனால் இந்தப் பகுதியில், சேதம் அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது. பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ரஷ்யாவின் பசிபிக் பெருங்கடலில் உள்ள குரில் தீவுகளின் முக்கிய பகுதியான செவெரோ-குரில்ஸ்க் கடற்கரைப் பகுதியில் முதல் சுனாமி அலை தாக்கியதாக மாகாண ஆளுநர் வலேரி லிமாரென்கோ தெரிவித்தார். ஹவாய் பகுதியில் சுனாமி அலைத் தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


ஜப்பான் நேரப்படி காலை 8:25 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ஜப்பான் மற்றும் அமெரிக்க நிலநடுக்கவியலாளர்களின் தகவலின்படி 8.0 ரிக்டர் ஆகப் பதிவானது. பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அதன் அளவீட்டை 8.8 ஆகப் உயர்த்தியது. 


கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் 9.0 ரிக்டர் அளவுக்கு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது இந்த நிலநடுக்கம் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்