தூத்துக்குடி: மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடியில் அபார வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 ஆம் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது போலவே இந்த முறையும் மிகப் பெரிய வெற்றி அவருக்குக் கிடைத்துள்ளது.
2019 லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி 5 லட்சத்து 63 ஆயிரத்து 143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதல் முறையாக எம்.பி ஆனார். அந்தத் தேர்தலில் அவர் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனை வீழ்த்தியிருந்தார்.
இந்தத் தேர்தலிலும், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி இம்முறை 5 லட்சத்து 3 ஆயிரத்து 317 வாக்குகள் பெற்று அபார வெற்றியை ஈட்டியுள்ளார். கடந்த தேர்தலை விட சற்று வாக்குகள் குறைந்தாலும் கூட போன முறை போலவே இந்த முறையும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
கனிமொழியின் வெற்றியை திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் ஸ்டார் தொகுதியாக மாறி தூத்துக்குடி லோக்சபா தொகுதியில், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 6 பேரவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த மிகப் பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் தூத்துக்குடி மக்களை முற்றிலுமாக திமுக பக்கம் திருப்பி விட்டது. அதேபோல கடந்த ஆண்டு கடைசியில் தூத்துக்குடியில் ஏற்பட்ட மிகப் பெரிய வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பின்போது கனிமொழி அங்கேயே முகாமிட்டு வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட்டு வந்தார் என்பதும் நினைவிருக்கலாம்.
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}