விழுப்புரம் : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் துறை சார்ந்த செயல் திட்டங்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் அறிவிப்பாக தமிழை ஆட்சி மொழியாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து துறைகளுக்கும் கொள்கைகள் அறிவிக்கப்பட்டது. அதன் விபரம்:
தவெக துறை சார்ந்த செயல் திட்டங்கள் அறிவிப்பு :

* மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும்.
* அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக மாற்ற சட்டத்திருத்தம் கொண்டு வர வலியுறுத்தப்படும்.
* கவர்னர் பதவி, ஆட்சிக்கு இடையூறு தருவதாக இருந்தால் அதை அகற்ற வலியுறுத்தப்படும்.
* மகளிர் காவல் நிலையங்கள் மட்டுமின்றி மாவட்டந்தோறும் மகளிர் பாதுகாப்பு கண்காணிப்பு கழகம் அமைக்கப்படும்.
* ஆவினில் கருப்பட்டி பால்
* பதனீர் தேசிய பானமாக அறிவிக்கப்படும்.
* அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இரு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணிய வேண்டும்.
* மண் பாண்டங்கள் போன்ற கை வினைப் பொருட்கள் அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வலியுறுத்தப்படும்.
* தற்போதுள்ள இடஒதுக்கீட்டு கொள்கை மாற்றி அமைக்கப்படும்
* ஐடி துறைகக்கு தனி அரசு பல்கலைக்கழகம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}