விழுப்புரம்: ரிமோட் பட்டனை அழுத்தி 101 அடி உயர கம்பத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்றி உசரப் பறந்தபோது அதைப் பார்த்து பெருமையுடன் புன்னகைத்தார் விஜய். தொண்டர்களும் இதை உணர்ச்சி பொங்க வரவேற்றனர்.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு 4 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக, கூட்டம் அலைமோதியதால் மாநாடு 3 மணிக்கே தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கொங்கு நாட்டின் வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதனை தொடர்ந்து அரங்கத்தில் என்ட்ரியான விஜய் ரேம்ப் வாக் செய்து தொண்டர்களை சந்தித்தார். அப்போது தொண்டர்கள் வீசி எறிந்த துண்டுகளை தோளில் போட்டுக் கொண்ட படி உற்சாகத்துடன் ரேம்ப்வாக் செய்தார் விஜய்.பிறகு தொண்டர்களின் வாழ்த்துக்களையும் வரவேற்பையும் கண்டு கண்கலங்கினார்.

இதனையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரிமோட் பட்டனை அழுத்தி மேடையில் இருந்தபடி, 101 அடி உயர கொடி கம்பத்தில் மாநாட்டு கொடியை ஏற்றிய மெது மெதுவாக உயிரே சென்று பட்டொளி வீசி பறந்தது. இதைப் பார்த்து விஜய் பெருமையுடன் புன்னகைத்தார்.
அதன் பின்னர் தவெகவின் உறுதி மொழியை பொருளாளர் வெங்கட்ராமன் வாசிக்க அனைவரும் எழுந்து நின்று வாசித்தனர். அப்போது நெஞ்சில் கை வைத்து தொண்டர்கள் உறுதியேற்றனர். இதனை தொடர்ந்து தவெக மாநாட்டில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து வெற்றி வெற்றி என தொடங்கும் தவெக கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. காமராஜர், பெரியார், அம்பேத்கரை மையப்படுத்தி தெருக்குரல் அறிவு எழுதி பாடிய பாடல் மேடையில் ஒலித்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}