சென்னை: அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27ம் தேதி மிக பிரமாண்டமாக விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெற்றது. அப்போது விஜய் பேசும் போது, 2026ல் தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். நம்முடன் வர நினைப்பவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயார். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தவெக கட்சிக்கு அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வந்த பின்னர் விஜய் கட்சியில் நிலைப்பாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, மக்கள் மத்தியில் விஜய்க்கு அதிகளவில் அதரவு இருப்பதாகவும், சர்வ சாதாரணமாகவே 20 சதவீத வாக்குகள் விஜய் கிடைக்கும் என்று திட்டவட்டமாக பிரசாந்த் கிஷோர் கூறியு்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விஜய்யின தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும், முதல்வர் வேட்பாளராக விஜய் தான் இருப்பார் என்றும் தவெக முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
மேலும் தங்களது தலைமையில்தான் கூட்டணி என்றும், தங்களது தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்ற நிலைப்பாட்டையும் தவெக எடுத்துள்ளதாம். தங்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் கட்சி என்றால் அது அதிமுக தான். தற்போது எதிர்கட்சி தலைவராக இருப்பவரும் எடப்பாடி பழனிச்சாமி தான். அந்த கட்சியின் இடத்தை தான் தவெக குறி வைக்கிறது. அதாவது அதிமுக இடத்தை தவெக பிடிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. திமுக vs அதிமுக என்பதை மாற்றி தவெக vs திமுக என்று மாற்றுவதே விஜய்யின் நோக்கமாக உள்ளதாம். அந்த இடத்திற்கு வந்தால் தான் ஆளும் கட்சியான திமுகவை எதிர்க்க முடியும் என்று விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அதிமுகவை கூட்டணிக்கு சேர்த்து கொண்டால் விஜய்யின் இமெஜ் பாதிக்கப்படும் என்பதால், விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பிற கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் விஜய் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டு இப்பதாகவும். அந்த கட்சிகளும் விஜய் பேச்சிற்கு கட்டுப்பட்டு தான் இருக்க வேண்டும் என்று விஜய் நினைப்பதாகவும தவெக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கினறன.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}