திருச்சி: கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை நம்பிக்கை மோசடி செய்துள்ளது. சொன்னீர்களே? செய்தீர்களா?... என திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
திருச்சியில் இன்று நடந்த பிரச்சார கூட்டத்தில் விஜய் பேசுகையில், பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி ஓசி எனச் சொல்லிக்காட்டுகிறார்கள். டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு சொல்லிக் காட்டி அசிங்கப்படுத்துவதா?

ஏழைகளின் ஏழ்மையை பயன்படுத்தி கிட்னி திருட்டு மோசடி நடக்கிறது. அதுவும் திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான இடத்தில் தான் நடக்கிறது. ஆனால், அதை திருட்டு இல்லை முறைகேடு என திமுக கூறுகிறது. கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை நம்பிக்கை மோசடி செய்துள்ளது. நீட் தேர்வையும் கல்விக் கடனையும் ரத்து செய்வோம் என சொன்னீர்களே செய்தீர்களா?. மக்கள் நலப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினீர்களா? பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்?
திருச்சி மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள் இருந்தும் என்ன பயன். திருச்சியில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல் மணல் அள்ளுவதில் திமுக அரசு நன்றாக காசு பார்க்கிறது. கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்து கொடுக்கும். பெண் பாதுகாப்பில், சட்ட பிரச்சனைகளில் No Compromise. நடைுமறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை, நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார்.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}