பரந்தூர் விமான நிலையப் போராட்டக் களத்திற்கு.. நாளை விரைகிறார் தவெக தலைவர் விஜய்!

Jan 19, 2025,01:09 PM IST

சென்னை: பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து நடந்து வரும் போராட்டக் களத்திற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நாளை செல்லவுள்ளார். அங்கு போராட்டக் குழுவினரை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவிக்கவுள்ளார்.


சென்னையில் தற்போது மீனம்பாக்கத்தில் விமான நிலையம் உள்ளது. சர்வதேச விமான நிலையமாக இருக்கும் சென்னைக்கு இந்த விமான நிலையம் போதுமானதாக இல்லை. இதை விஸ்தரிக்கும் முயற்சிகளும் நடந்தன. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் கிரீன்பீல்ட் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.


பெங்களூரில்  உள்ளது போல பிரமாண்டமான அளவில் இந்த விமான நிலையம் அமைக்கவும், இந்த விமான நிலையத்துடன் மெட்ரோ ரயில் கட்டமைப்பை இணைக்கவும் விரிவான திட்டங்கள் தீட்டப்பட்டு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 3 வருடமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தாமதமாகி வருகிறது.




விவசாய நிலங்களை எடுத்து விட்டு விமான நிலையத்தை அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் மட்டுமல்லாமல், சென்னையைச் சுற்றிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகளும், கிராமத்தினரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், நாளை பரந்தூர் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களைச் சந்திக்கவுள்ளார். இதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. முதலில் அம்பேத்கர் திடல் பகுதியில் மக்களைச் சந்திக்க விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது அது மாற்றப்பட்டு அருகில் உள்ள வீனஸ் வெட்டிங் ரிசார்ட் என்ற தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சந்திப்பு நடைபெறவுள்ளது. 


விஜய் கட்சி ஆரம்பித்த பின்னர் இதுவரை மக்கள் களத்திற்கு வந்ததில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக அவர் குரல் மட்டுமே கொடுத்து வந்தார். இந்த நிலையில்தான் முதல் முறையாக அவர் பரந்தூர் வருகிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் வருவதால் மிகப் பெரிய அளவில் அவரது கட்சியினரும் அங்கு திரளும் வாய்ப்புள்ளது. இதனால் போதிய பாதுகாப்புக்கும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.


பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களை விஜய் சந்திப்பாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை சந்தித்தால் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு அவர் பங்கேற்கும் முதல் பிரஸ் மீட்டாக அது அமையும். கட்சி ஆரம்பித்த பின்னர் இதுவரை ஒருமுறை கூட அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


விஜய்க்கு கட்சி ஆரம்பித்து முதல் மாநாடு நடந்த இடம் விக்கிரவாண்டி, முதல் போராட்டக் களம் வீனஸ் வெட்டிங் ரிசார்ட் என்று எல்லாமே வி வி என்று வருவது எதார்த்தமானதா.. அல்லது திட்டமிட்டதா என்று தெரியவில்லை. இது திட்டமிட்டதாக இருந்தால் அடுத்து வேங்கைவாசல் கிராமத்துக்கும் விஜய் விசிட் அடிக்க வாய்ப்புண்டு என்று எதிர்பார்க்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்