கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.. சுப்ரீம் கோர்ட்டில் தவெக வழக்கு

Oct 08, 2025,05:07 PM IST

டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு செய்யப்பட்டுள்ளது. பிற  கரூர் வழக்குகளோடு இணைத்து இதை விசாரிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.


அக்டோபர் 3 அன்று, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு (SIT) அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்கறிஞர்கள் டிக்சிதா கோஹில், பிரஞ்சல் அகர்வால் மற்றும் யஷ் எஸ் விஜய் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.




இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், காவல்துறை விசாரணை சுதந்திரமாக இல்லை என்று உயர் நீதிமன்றமே கருத்து தெரிவித்திருந்த நிலையில், மாநில காவல்துறை அதிகாரிகளை மட்டுமே கொண்ட SIT அமைத்திருப்பது நியாயமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறி வருகிறார். அக்டோபர் 6 அன்று மாலை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். கரூர் அருகே நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்காதது குறித்து சில தரப்பினரிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், விஜய் இந்த வீடியோ அழைப்புகளை தொடங்கியுள்ளார். 


இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,  விஜய் என் மருமகனுக்கு அழைப்பு விடுத்து, உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்றும், இது வருந்தத்தக்கது என்றும் கூறினார். மேலும், குடும்பத்திற்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தினார் என்றார். மற்றொரு குடும்பத்தினரிடம் பேசிய விஜய், நான் உங்கள் மகன் போல என்று ஆறுதல் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்